Mari Selvaraj: ‘ தீவிர விஜய் ரசிகன் நான்.. அவரின் படம் பார்க்க சென்று குழிக்குள் விழுந்தேன்‘ .. நினைவுகளை பகிர்ந்த மாரி செல்வராஜ்..!

விஜய் படம் பார்க்கப் போய் குழிக்குள் விழுந்த கதையை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

Continues below advertisement

விஜய் படம் பார்க்கப் போய் குழிக்குள் விழுந்த கதையை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

Continues below advertisement

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ‘மாரி செல்வராஜ்’. அந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து ‘கர்ணன்’ படம் எடுத்து வெற்றி கண்டார் மாரி செல்வராஜ். அதேசமயம் அவரின் படங்கள் சாதிய ஒடுக்குமுறையை மையமாக வைத்து, பிற சமுதாயத்தினரை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 

இந்த நிலையில் தனது 3வது படமான மாமன்னனை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, லால் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. மாமன்னன் படம் தொடர்பான பல தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தீவிர விஜய் ரசிகர்

இதனிடையே இயக்குநர் மாரி செல்வராஜ் பங்கேற்ற நேர்காணலில் அவரின் அண்ணன் ஒருவர் பேசும் வீடியோ காண்பிக்கப்பட்டது. அதில் அந்த அண்ணன், ‘மாரிக்கு என்று ஒரு விஜய் பாட்டு ஒதுக்கி வச்சிடுவோம்’ என கூறினார். இதுகுறித்து பேசிய மாரி செல்வராஜ்,  “நாங்க எல்லோரும் விஜய் ரசிகர்கள். அண்ணனும் சீரியஸான விஜய் ரசிகர்களில் ஒருவர். நான் விஜய்யோட எல்லா பாட்டுக்கும் ஆடிடுவேன். விஜய் என்பது ஒரு எமோஷனில் கலந்த ஒன்று. நான் இப்போதும் அவரின் படங்களை பார்ப்பேன். அந்த நேரம் மட்டும் விஜய்யின் ரசிகராக மாறிவிடுவேன். இப்பதான் முதல் நாள் முதல் காட்சி பார்க்கிறது எல்லாம் குறைஞ்சு போச்சு. 

கடைசியா நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்த விஜய் படம் ‘மதுர’. நான் சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு சென்னை வந்து விட்டு திருநெல்வேலிக்கு போகிறேன். காலையில ஒரு 10 அல்லது 11 மணி இருக்கும். ஏற்கனவே டிக்கெட் எடுத்து வச்சிட்டு பசங்க காத்துகிட்டு இருக்காங்க. நான் பஸ்ல ஏறி வேகமா போறேன். திருநெல்வேலில ராம் தியேட்டர் தான் பெரிய தியேட்டர். வாசல்ல குழி தோண்டி போட்டு இருந்தாங்க. நான் போற பஸ் கொஞ்ச தூரம் தள்ளி தான் நிற்கும். படம் வேற ஆரம்பிச்சிட்டாங்க. தியேட்டர் வெளியில யாருமே இல்ல. நான் ஆர்வத்துல பஸ்ல இருந்து குதிச்சிட்டேன். நேரா கேபிள்காக தோண்டப்பட்ட குழில போய் விழுந்துட்டேன். என்னோட உயரத்துக்கு இருக்குற குழியில் இருந்து கஷ்டப்பட்டு ஏறி படம் பார்த்தது தனிக்கதை” என தெரிவித்திருந்தார். இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola