சூர்யா தயாரிப்பில் முதன்முறையாக படத்தினை இயக்கவுள்ளார் இயக்குநர் பாலா. இதில் அதர்வா முரளி ஹூரோவாக நடிக்கவுள்ளார்.


தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருந்தாலும் ஒரு சிலரே தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பார்கள். அத்தகைய சிறப்புக்குரியவர் தான் தேனியைச் சேர்ந்த இயக்குநர் பாலா. சினிமாவில் கால் பதிக்கவேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்த பாலா, இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக தன் பணியினைத் ஆரம்பித்தார். நடிகர் விக்ரமனை வைத்து பாலா இயக்கிய முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைக் கண்டார்.


இதனையடுத்து இரண்டாவதாக நடிகர் சூர்யா நடித்த நந்தா படத்தினை இயக்கி அதிலும் சிறந்த இயக்குநர் என்ற பாராட்டினைப் பெற்றார். இதனையடுத்து பிதாமகன், அவன் இவன் உள்ளிட்ட படங்களில் சூர்யாவினை வைத்து இயக்கியதில், இவ்விரு கூட்டணியும் மக்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. பல விமர்சனங்கள் இருந்தாலும் சிறந்த படம் என்ற விமர்சனங்களையும் இப்படங்கள் பெற்றன.



இந்நிலையில் தான் மீண்டும் சூர்யா- பாலா கூட்டணி இணையவுள்ளது. ஆனால் இந்த முறை சற்று மாறுதலாக முதன் முறையாக நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தினை இயக்குநர் பாலா இயக்கவுள்ளார். நிச்சயம் மற்ற படங்களைப்போன்று இதுவும் மாபெரும் வெற்றியினைப் பெறும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாகிறார்.  ஏற்கனவே, கடந்த 2013-ஆம் ஆண்டு எரியும் பனிக்காடு நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட பாலாவின் பரதேசி படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடித்திருந்தார். இந்தப்படத்தில் ஹூரோ அதர்வா மட்டுமின்றி, வேதிகா, ரித்விகா உள்ளிட்ட பலரும் நடிப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்கள். மேலும் எதார்த்த வாழ்க்கையினை படமாக்கிய நிலையில் விமர்சன ரீதியாகவும் பரதேசி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்நிலையில் தான் மீண்டும் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அதர்வா முரளியும் பாலாவும் மீண்டும் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் இணைகிறார்கள்.



சூர்யா தயாரிப்பில் பாலா இயக்கும் படத்தில் அதர்வா முரளி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் இப்படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடிக்கு கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார் என்றும், அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் பாலா துருவ் விக்ரமின் ‘வர்மா’ படத்திற்குப் பிறகு சூர்யா தயாரிப்பில் இந்த படத்தினை இயக்கவுள்ளார். அதோடு, ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ’வித்தகன்’ என்ற திரைப்படடும் பாலா தயாரிப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எதார்த்த வாழ்க்கையினை படமாக்குவதில் வல்லமை பெற்ற இயக்குநரில் ஒருவரான பாலா, இயக்கவிருக்கும் இப்புதிய திரைப்படம் நிச்சயம் வெற்றியினை அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.