டெல்டா வாசி என்பதால் இயக்குனர் பாண்டிராஜ், தன்னுடைய படைப்புகளில் பாடல்களில் டெல்டா வாசம் இருப்பதை எப்போதும் உறுதி செய்வார். அவரது படத்தின் காட்சிகளும் டெல்டாவையே வலம் வரும். பாடல்களில் டெல்டா வாசம் வீசும். வரிகளில் டெல்டா வழிந்தோடும். அவரது 45வது பிறந்த நாளில் பாண்டிராஜ் படங்களின் அருமையான டெல்டா மண் வீசும் டாப் 5 பாடல்கள் இதோ! 

1.ஒரு வெட்கம் வருதே வருதே...

‛‛மழை இன்று வருமா வருமாகுளிர் கொஞ்சம் தருமா தருமாகனவென்னை களவாடுதேஇது என்ன முதலா முடிவாஇனி எந்தன் உயிரும் உனதாபுது இன்பம் தாலாட்டுதேகேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்கூறு போட்டு கொல்லும் இன்பம்பர பர பரவெனவேதுடி துடித்திடும் மனமேவர வர வர கரை தாண்டிடுமே...’’

தாமரை வரிகளில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இந்த பாடல்கள் எப்போதும் மழை விழும் ரகம். 

2.மருதாணி பூவப்போல...

‛‛தட்டி தட்டி நெஞ்சத்துறக்குற
எட்டி எட்டி உள்ள குதிக்கிற
வெட்டி வெட்டி வேலைவெட்டி மம்முட்டிய எடுக்குற
நெத்திப்போட்டு மத்தியில சுத்திவச்சி அடிக்கிற
இம்புட்டையும் பண்ணிப்புட்டு நல்லவளா நடிக்கிற
மருதாணி பூவே...’’
தாஜ்நூர் இசையில் மண்வாசனை மாறாமல் காட்சிப்படுத்தப்பட்ட இந்த பாடலை கேட்டால், அந்த கிராமப்பின்னணியில் நுழைந்த உணர்வை தரும். 

3.தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...

‛‛கண்டிப்பிலும் தண்டிப்பிலும்கொதித்திடும் உன் முகம்.காய்ச்சல் வந்து படுக்கையில்துடிப்பதும் உன் முகம்.அம்பாரியாய் ஏற்றிக்கொண்டுஅன்று சென்ற ஊர்வலம்.தகப்பனின் அணைப்பிலேகிடந்ததும் ஓர் சுகம்.வளர்ந்தவுமே யாவரும்தீவாய் போகிறோம்.தந்தை அவனின் பாசத்தைஎங்கே காண்கிறோம்.நமக்கெனவேவந்த நண்பன் தந்தை..’’

தந்தையின் மகிமை போற்றிய பாடல். கேடி பில்லா கில்லாடி ரங்காவில் தோன்றிய இந்த பாடல், இன்றும் பல மகன்களின் காலர் டியூன். 

டெல்டா வாசம்... ஃபிரேம் பை ஃபிரேம் வீசும் ‛நம்ம வீட்டு பிள்ளை’ பாண்டிராஜ்!

4.தண்டோரா கண்ணால...

‛‛பொட்டு வெச்ச பொண்ணுசுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணுவட்டம் கட்டி நின்னுகும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னுகிழற்பாலதானே வரும் சூரியன்என நானும் கூட நினச்சேன்ஏகாதலும் பேசும் மகராசி உன் முகம்பார்க்க தூங்கி முழிச்சேன்என்னவோ போடி உன்னையெதடிரெக்கை முளைக்குதடிநெஞ்சு பரகித்தடி...’’

டி.இமான் இசையில் யுகபாரதி எழுதிய இந்த பாடல் கடைக்குட்டி சிங்கம் படத்தில் காட்சிப்படுத்தியதிலும் கண்ணுக்கு இனிமை!

 

5.மயிலாஞ்சி... மயிலாஞ்சி...

‛‛கண்ணாடி போலகாதல் உன்ன காட்டஈரேழு லோகம்பாத்து நிக்குறேன் கண்ணால நீயும்நூல விட்டு பாக்ககாத்தாடியாகநானும் சுத்துறேன் சதா சதாசந்தோஷமாகுறேன்மனோகரா உன் வாசத்தால்உன்னால நானும் நூறாகுறேன்...’’

டி.இமான் இசையில் யுகபாரதி எழுதி மயிலாஞ்சி... அனைத்து தரப்பினரும் கொண்டாடிய பாடல்! இசை அமுது!

பசங்க To நம்ம வீட்டு பிள்ளை... பாண்டிராஜ் ஸ்பெஷல் ஆல்பம்!

இன்னும் பல மண்வாசனை மாறாத பல பாடல்கள் பாண்டிராஜ் படைப்பில் இருக்கும். அடுத்த பிறந்தநாளில் இன்னும் பல பாடல்களை வரிசைப்படுத்துவோம்