நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஒன்றில் கலந்துக்கொண்டார். கொச்சின்  வழியாக காரில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார் . அப்போது அவரை வழி மறைத்த சில மர்ம நபர்கள் கடத்தி , காரிலேயே பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை துணிச்சலாக காவல்துறையில் புகார் அளித்தார். இது கேரளாவையே மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழக்கை விரைந்து விசாரித்த காவல்துறையினர் , நடிகையின் வாகன ஒட்டுநர் முதல்  குற்றத்தில் ஈடுபட்ட சில கூலிப்படையினரை கைது செய்தனர். விசாரணை முடிவில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பிருப்பதாக கூறி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 85 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை இன்னும் முடியாத நிலையில் , நடிகை தொடர்ந்து போராடி வருகிறார். இந்த நிலையில்  திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கும் இதில் தொடர்பிருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. 







இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் , ஒரு ஆடியோ உரையாடல் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அந்த உரையாடலானது  குற்றம் சாட்டப்பட்ட திலீப்பின் மைத்துனர்  சூரஜ்ஜிற்கும் , சரத் என்பவருக்கும் இடையில் நடந்தது. அந்த உரையாடலில் சூரஜ் , சரத்திடம்  “ கடத்தல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டது , காவ்யா மாதவன்தான் என்றும் நடிகையை பழி வாங்கும் நோக்கில் இதனை திட்டமிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் வழக்கில் மற்றொரு திருப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.



திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியார்.  அவருடன் திருமண உறவில் இருக்கும் பொழுதே  திலீப் காவ்யா மாதவனுடன் காதல் உறவில் இருந்திருக்கிறார். அதனை அறிந்த நடிகை , தனது நெருங்கிய தோழியான மஞ்சு வாரியாரிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது மஞ்சு வாரியாருக்கும் , திலீப்பிற்கும் இடையில் விவாகரத்து அளவிலான விரிசலை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகையை பழி வாங்குவதற்காகத்தான் தீலீப் இத்தகைய குற்றச்சம்வத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது காவ்யா மாதவனும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். காவ்யாவிடம் நாளை ( ஏப்ரல் 11 ) விசாராணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .