தமிழ் சினிமாவில் தற்போதைய நடிகர்களில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் தற்போது துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும், ஹிந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்திலும் நடித்துள்ளார்.


அதனைத் தொடர்ந்து தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துவருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு செல்வராகவனும், தனுஷும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.






நானே வருவேன் படத்துக்கு பிறகு தனுஷ் தெலுங்கில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தயாரிப்பாளர் நாகா வம்சி தயாரிக்கும் இப்படம் தமிழிலும் நேரடி தெலுங்கு படமாகவும் வெளியாகிறது.  இப்படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என தனுஷ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.









அதன்படி தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு வாத்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தில் ஹீரோயினாக சம்யுக்தா மேனன் நடிக்கவிருக்கிறார்.






இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மலையாளத்தில் தீவண்டி படம் மூலம் கவனம் ஈர்த்த சம்யுக்தா தமிழில் ஏற்கனவே களரி படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண