தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. காதல் ஜோடிக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


பாலிவுட் திரையுலகில் தீபிகா படுகோன் தனித்துவமான பண்புகளால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பு, ஸ்டைல், பேச்சு என எதுவானாலும் தீபிகாவின் டச் இருக்கும். போலவே, ரன்வீர் சிங் பாலிவுடன் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்.  


திரையில் க்யூட் ஜோடிகளாக இருந்தவர்கள் 6 ஆண்டுகளாக காதலித்தனர். இருவரும் 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் பணியில் பிஸியாகிவிட்டனர். கணவன் - மனைவியாக, நெருங்கிய நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்ததை சமூக வலைதளம், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வெளிப்படுத்தினர். பாலிவுட் க்யூட் ஜோடிகள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடினர். 






மிகவும் பிரம்மாண்ட தயாரிப்பில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 AD' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தீபிகா படுகோன்.  


பிப்ரவரி, 2024 மாதம் தீபிகா படுகோன் கருவுற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ரன்வீர் - தீபிகா இருவரும் குழந்தையை வரவேற்க மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக தெரிவித்திருந்தனர். தீபிகா படுகோன் ஷூட்டிங்கில் இருந்து ப்ரேக் எடுத்து ஓய்வெடுத்தார். சமீபத்தில் இருவரும் மெடர்னிட்டி புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். அவை வைரலாகின. ரசிகர்கள் கொண்டாடினர்.


இந்நிலையில், 08.09.2024 அன்று தீபிகா, ரன்வீர் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள்,திரையுலகினர் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


ரசிகர்கள், ’குட்டி தீபிகா’, ‘குட்டி ரன்வீர்’ வந்தாச்சு என்று கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தீபிகா,ரன்வீர் ஜோடிக்கு மகள் பிறந்ததை கொண்டாடி வருகின்றனர். பலரும் கமெண்ட்களில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.