நடிகர் விஷ்ணு விஷால் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அவர் மீதும், அவர் தந்தை மீதும் நடிகர் சூரி அளித்த நில மோசடி புகார் குறித்து கேள்வியில் எரிச்சலான அவர், சூரியை கடுமையாக சாடினார்.
அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை என்று துவக்கத்தில் பதிலளித்த விஷ்ணு விஷால், பின்னர் செய்தியாளர்கள் அடுத்தடுத்து எழுப்பிய கேள்வியை தொடர்ந்து, ‛எனக்கும் என் தந்தைக்கும் அந்த புகாரில் எந்த தொடர்பும் இல்லை; சூரியின் ஒவ்வொரு புகாருக்கும் என்னால் விளக்கம் தர முடியும் என்று கூறிய விஷ்ணு விஷால்,