திரை பிரபலங்களை போலவே சர்வதேச அளவில் பிரபலமாக ஏராளமான ரசிகர்களை கொண்டவர்கள் கிரிக்கெட் வீரர்கள். இருப்பினும் இரு தரப்பினருக்கும் எதிர்தரப்பினர் மீது ஈர்ப்பு அதிகம். அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் எடுப்பதில் நடிகர்கள் ஆர்வம் காட்டுவதும், நடிகர்களை போல ரீ கிரியேட் செய்வதும் வழக்கமான ஒன்று. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கு என்றுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது ஈர்ப்பு அதிகம். அவரை போலவே போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் எடுத்து அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து விடுவார்கள். 




அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, ரஜினிகாந்த் போல ஷோபாவில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்தது சோசியல் மீடியாவில் வைலானது. அதை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தற்போது ரஜினிகாந்த் போல ரீ கிரியேட் செய்துள்ள புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  


2016-ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'கபாலி' படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரஜினிகாந்த் தோற்றம் மற்றும் ஸ்டைல் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் தெறிக்க விடும் லுக் ஒன்றை போல ரீ கிரியேட் செய்த புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து 'தலைவா' என கேப்ஷன் கொடுத்துள்ளார் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். தற்போது இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது






தற்போது டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தி வரும் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த போட்டியில் புரணி டெல்லி அணி தலைவனாக ரிஷப் பண்ட் இருந்து வருகிறார். தற்போது சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியுடன் மோதிய புரணி டெல்லி அணி தோல்வியை சந்தித்தது. இருப்பினும் ரிஷப் பண்ட்32 பந்தில் 35 ரன்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஃபகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இன்றும் அதே இளமையுடனும் சுறுசுறுப்புடனும் சுழலும் ரஜினிகாந்த் அவரின் ரசிகர்களுக்கு என்றுமே ஒரு புத்துணர்ச்சி தான்.