உலகம் முழுக்க கொரோனா தொற்று மனிதர்களுக்கு ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது. முதல் இரண்டு அலைகள் வந்து ஆட்டிப்படைத்து தற்போது கொஞ்சம் அதன் தாக்கம் அதிகரித்திருந்தாலும் இன்னமும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது.


நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசனுக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. இதற்கிடையே மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.


கருப்பா மிதந்தாலே முதலையா? கூடுவாஞ்சேரியில் முதலை வதந்தி..! உண்மை என்ன? 


மேலும் தற்போது உருமாறிய கொரோனா (ஓமைக்ரோன்) பரவிவருகிறது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்தவருக்கு இந்தப் புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Simbu Hansika Reunion: "எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.." ஹன்சிகா பற்றி சிம்பு கொடுத்த ஷாக் நியூஸ்


இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவரான வெங்கட் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர், “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் இது ஒரு மகிழ்வான நாள் அல்ல. ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. ஆனால் இன்னும் அந்த வலி, அழுத்தம், பயம் எதுவும் மறைந்த பாடில்லை. துரோகிக்கும், எதிரிக்கும்கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது.




கொரோனா வைரஸ் இன்னும் இருக்கிறது, அனைவரும் உங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தி தருபவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


மேலும் வாசிக்க: Chennai Rains: மழை நீர் தேக்கம்.. சென்னையில பல ரூட் மாற்றம்.. புது ரூட் இதுதான்.! முழு விவரம்!