குக் வித் கோமாளி சீசன் 3 ஷோ இறுதிப்போட்டியின் பிரம்மாண்டமாக, கலகலப்பாக வெளியாகியுள்ளது. அது வெளியானதில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் அதனைப் பார்த்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தர்ஷனுக்கு தான் ஆல் தி பெஸ்ட் வோட் அதிகமாக இருக்கிறது.


இறுதிப் போட்டியில் அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். கிரேஸ் கருணாஸ் வைல்ட் கார்டு மூலம் வந்துள்ளார். 


அடுத்த வாரம் இந்தப் போட்டியின் ஃபைனல்ஸ் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.  வழக்கமாக 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஷோ அன்றைய தினம் மதியம் 3 மணி முதலே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரமோ வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி இறுதிப் போட்டி லைவாக வரப்போவதில்லை. இதற்கான சூட்டிங் கடந்த வெள்ளிக்கிழமை 2 மணியுடன் முடிவு பெற்றுவிட்டது. 


டைட்டில் வின்னர் உஷ்:


இதற்கு முந்தைய சீசன்களில் இவர்தான் ஃபைனலிஸ்ட் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் கசிந்துவிட்டது. கனி, வனிதா விஜய்குமார் என மக்களும் ஊகித்தனர். அதேபோல் ஆங்காங்கே தகவல்களும் கசிந்தன. ஆனால் இந்த முறை அப்படியல்ல, சீசன் வின்னர் யார் என்று சொல்லாமல் செம்ம ரகசியம் காக்கிறது மொத்த யூனிட்டும். அதேபோல், கடந்த 2 சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் ஃபைனலிஸ்ட்களான அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா அப்புறம் வைல்டு கார்டு என்ட்ரன்ட்ஸ் கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப் ஆகிய அனைவருமே கிச்சன் கில்லாடிகள். ஆகையால் மக்களால் அவ்வளவு எளிதாக யூகிக்க முடியவில்லை. ஆனாலும், சூப்பர் சிங்கர் மாதிரி ஓட்டுப் போடச் சொன்னால் தர்ஷனுக்கே அதிக வாக்கு விழும் என்று நெட்டிசன்களே கூறுகின்றனர்.


இதோ அந்த ப்ரோமோ:



சர்ச்சையில் சிக்கிய ஷோ:


பிரபலம் என்றால் சர்ச்சையும் இருக்கத்தானே வேண்டும். அப்படித்தான் குகு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் வடிவில் ஒரு சர்ச்சை வந்தது.


குக் வித் கோமாளி சீசன் 3  வீடியோ ஒன்றில் வெங்கடேஷ் பட் பேசிய சில காட்சிகள் இணையத்தில் வைரலானது. காரணம் அதில், செப் வெங்கடேஷ் பட் ' சொன்னா நம்ப மாட்டீர்கள். குக் வித் கோமாளி பார்த்துதான் நான் கர்ப்பமாகி இருக்கேன் என்று எனக்கு சிலர் மெசேஜ் அனுப்பியிருக்காங்க". அதற்கு ரோஷினி வாவ் என்று சொல்ல, தொடர்ந்து வெங்கடேஷ் பட் பேசினார். "எட்டு வருசமா எனக்கு குழந்தை இல்லை. அப்ப செக் அப்காக போயிருந்தேன். ஒரு லேடி குழந்தையோட வந்து என்கிட்ட  சொன்னாங்க. நான் கடைசி வருஷம் இதே ட்ரீட்மெண்ட்க்காக வந்து இருந்தேன். எங்களுக்கு அப்ப குழந்தை இல்ல. குக் வித் கோமாளி பார்த்தேன். என்னுடைய கவலை எல்லாம் மறந்து எனக்கு குழந்தை பிறந்துச்சு. நீ கண்டிப்பா அத பாரு உனக்கு குழந்தை பிறக்கும். நீங்க சொன்னா நம்ப மாடீங்க அந்த பொண்ணுக்கு இப்ப குழந்தை இருக்கு" என்று தெரிவித்தார். 


இதைப்பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களின் வெங்கடேஷ் பட் பேசிய காட்சியை பங்கமாக கலாய்த்தனர். அதற்கு செஃப் வெங்கடேஷும் பதிலடி கொடுத்தார்.