Pavithra Lakshmi: '7 நாட்கள் கடந்து போச்சு’ .. அம்மா இறந்த சோகத்தை ரசிகர்களிடம் பகிர்ந்த பவித்ரா லட்சுமி..

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது அம்மா மரணமடைந்த செய்தியை சோகத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது அம்மா மரணமடைந்த செய்தியை சோகத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

டான்ஸ், மாடல், ஃபேஷன் டிசைனர் என பலதுறைகளிலும் முத்திரை பதித்த பவித்ரா லட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி சமையல் நிகழ்ச்சியான  குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார். முன்னதாக விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்து கொண்டார். ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அதில் பங்கேற்க முடியவில்லை. 

பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருக்கு குக் வித் கோமாளி ஷோ நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் ஹீரோயினாகவும் பவித்ரா லட்சுமி நடித்திருந்தார். இந்த நிலையில் தான் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், இன்றோடு (நேற்று)  7 நாட்கள் ஆகிவிட்டது. நான் இன்னும் இதை என் தலையில் ஏற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். நீ என்னை விட்டு பிரிந்து ஒரு வாரம் ஆகிறது பாப்பா. ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. நீங்கள் சந்தித்த அந்த ஐந்து வருட போராட்டமும் வலியும் வேதனையும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என்பதுதான் எனக்கு ஆறுதல் சொல்ல இப்போது நான் நினைப்பது. 

நீங்கள் எப்போதும் ஒரு சூப்பர்மாம், உண்மையில் சூப்பர் வுமன். ஒற்றை பெற்றோராக இருப்பது எளிதான வேலை இல்லை, ஆனால் நீங்கள் அதை எல்லா வழிகளிலும் ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் ஒரு முறை உங்களுடன் பேசுவதை, ஒருமுறை உங்கள் உணவை  சாப்பிடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் நீங்கள் என்னை வேறு வழியின்றி விட்டுவிட்டீர்கள். தயவு செய்து எப்பொழுதும் என் பக்கத்தில் இருங்கள் என்று நான் இப்போது கேட்கிறேன். 

இந்த நேரத்தில் நான் தேர்ந்தெடுத்த குடும்பமாக என் பக்கம் நின்ற அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள், நீங்கள் இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை.  அம்மா மரணம் தொடர்பான அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்காததற்கு மிகவும் வருந்துகிறேன் என அவர் கூறியுள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola