Zoya : ஜோயா மிஸ்ஸிங்! கடந்த வாரம் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் வந்த சந்தேகம்... தானாக வெளியேற்றிவிட்டாரா?

Zoyaa : கடந்த வாரம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜோயா கலந்து கொள்ளாததால் காரணம் என்ன?

Continues below advertisement

சின்னத்திரை தான் மக்களின் மிக பெரிய என்டர்டெயின்மென்ட் ஆப்ஷனாக இருந்து வருவதால் அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். அதிலும் ஏதாவது ஒன்று நல்ல வரவேற்பை பெற்றுவிட்டால் அடுத்தடுத்த சீசன்கள் என தொடர ஆரம்பித்துவிடும். அப்படி முதல் சீசன் முதல் இன்று வரை சின்னத்திரை ரசிகர்களை ஆக்கிரமித்த ஒரு நிகழ்ச்சி தான் வார இறுதி நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி.

Continues below advertisement

கடந்த நான்கு சீசன்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த சமையல் கலந்த காமெடி ஷோவின் ஐந்தாவது சீசன் தற்போது கலகலப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 


ஆனால் 'குக்கு வித் கோமாளி' ஐந்தாவது சீசன் தொடங்கிய நாள் முதல் எக்கச்சக்கமான பிரச்சனைகளுடன் தான் துவங்கியது. தயாரிப்பாளர் தொடங்கி நடுவர், கோமாளி என பலரும் விலக ஒரு மாதிரியான எதிர்பார்ப்புடன் தான் குக்கு வித் கோமாளி சீசன் 5 துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜோயா. இவர் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் சில ஷார்ட் பிலிம்களை இயக்கியுள்ளார். தற்போது கூட படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஜோயாவின் வெகுளித்தனமான பேச்சும், செயல்பாடுகளையும் பார்க்கும் போது இவர் உண்மையிலேயே குக்கு தானா அல்லது கோமாளியா என குழப்பம் ஏற்படும். 

சரியாக சமைக்க தெரியாதவர் என்றாலும் இன்று வரை நிகழ்ச்சியில் கடுமையாக போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் கடத்த வாரம் சின்னத்திரை நடிகர் வசந்த் வாசி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். நன்றாக சமைக்க தெரிந்த வசந்த் வாசி வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 


இது தொடர்பாக சில மீம்ஸ் சோஷியல் மீடியா எங்கும் வைரலானது. சமைக்க தெரியாத ஜோயா உள்ள இருக்கும் போது நல்ல சமைக்க தெரிந்த வசந்த் வாசி வெளியேற்றப்பட்டாரே என சிலர் விமர்சனம் செய்தனர்.

அது சம்பந்தமாக ஜோயா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ”கதறுறவங்க கதறட்டும்” என போஸ்ட் செய்து இருந்தார். 

கடந்த வார குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜோயா கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் ஜோயா தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது? 

அதற்கு பதிலளித்த ஜோயா தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால்தான் கடந்த வார எபிசோடில் கலந்து கொள்ள முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறேன். அதனால் அடுத்த வார எபிசோடில் நிச்சயம் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார் ஜோயா. 

Continues below advertisement
Sponsored Links by Taboola