நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் என ஊடக உலகில் தனக்கென தனி இடம் பிடித்த கௌஷிக்  மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். 


பொறியியல் பட்டதாரியான கௌஷிக் தமிழின் முன்னணி யூ டியூப் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக, திரைப்பட விமர்சகராக பணியாற்றி மிகவும் புகழ்பெற்றவர். நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு 2 மணியளவில் கௌஷிக் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இறப்பதற்கு முன்பு கூட நடிகர் துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் படம் உலகளவில் 50 கோடி வசூலித்ததாக ட்வீட் செய்திருந்த நிலையில், அவரது மரணம் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.