வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார். 


நடிகர் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணந்துத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 


நடிகர் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக  ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். நடிகரின் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன்.






அவரது மனைவி மேரி. இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக விக்ரம் வீட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் தீபக். இவருக்கும் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.


இவர்களது திருமணம் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.