தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா கடந்த மார்ச் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார். இந்நிலையில் ஸ்ரீஜாதனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் கணரது பெயரை நிக்கினார். இது குறித்து சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீஜா இன்னும் எவ்வித கருத்து தெரிவிக்கவில்லை. அவரது முந்தைய இன்ஸ்டாகிராம் பெயர், “ஸ்ரீஜா கல்யாண்” என்று இருந்தது.  திங்கட்கிழமை அன்று அவர் தனது இயற்பெயரான ஸ்ரீஜா கொனிடேலாவ என்று மாற்றினார்.


மார்ச் 2016 இல், பெங்களூரு, தேவனஹள்ளிக்கு அருகிலுள்ள வீட்டில் ஸ்ரீஜா கல்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண விழாவில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் தென் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். மேலும் திருமண புகைப் படங்கள் சமூக வலை தளங்களில் ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டன.  தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா, அவரது மனைவி உபாசனா மற்றும் உறவினர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு சிரிஷ் ஆகியோர் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.


நவம்பர் 2018 இல், கல்யாண், ஸ்ரீஜாவும் தாங்கள் குழந்தையை பெற போவதாக அறிவித்தனர்.  இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீஜாவின் பேபி போன்ற புகைப் படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.


கல்யாணுக்கு முன் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  கல்லூரியில் ஏற்பட்ட காதலால் 19 வயதில் ஸ்ரீஜா மணந்துக் கொண்டார்.  இருப்பினும், அவரது மாமியார் வரதட்சணை கேட்பதாகக் கூறியதை அடுத்து, சட்டப் பூர்வமாக அவரிடமிருந்து பிரிந்தார் ஸ்ரீஜா. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளது.


இதனிடையே தனுஷ், ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 


இந்நிலையில் மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக நேற்று இரவு தனுஷ் திடீர் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் கூறி உள்ளார்.


நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து செய்வதாக அறிவித்தது, ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்துக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதேபோன்ற அறிக்கையை ஐஸ்வர்யாவும் வெளியிட்டுள்ளார்.


சில மாதங்களுக்கு முன்பு சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர் என்பதது குறிப்பிடத்தக்கது.