ட்விட்டரின் புதிய சி இ ஓ-வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். இதை அடுத்து அந்த நிறுவனத்தின் முந்தைய சி இ ஓ ஜாக் நிறுவனத்திலிருந்து பதவி விலகிக்கொண்டார். ஜாக்குக்கும் பராக்குக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக் என பல்வேறு சமூக வலைத்தளங்களில் பலர் வாழ்த்து பகிர்ந்து வந்தனர். இதற்கிடையே நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பை சாச்சா ஜாக்’ என பகடியாக ஜாக்குக்கு வாழ்த்து பகிர்ந்துள்ளார்.  
வெறுப்புப் பேச்சைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்ததற்காக நடிகர் கங்கனா ரனாவத் டிவிட்டரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார் நடிகர் கங்கனா. இந்த நிலையில்தான் பதவி விலகிய ஜாக்கைப் பகடி செய்யும் வகையில் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கங்கனா. 




கங்கனாவின் இன்ஸ்டாகிராம் பக்கம்






முன்னதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பதவி விலகிய கடிதத்தை ஜாக் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ‘இதை யாரும் கவனிக்கப் போவதில்லை என்றாலும் இதனை இங்கே பதிவிடுகிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.






அதற்கு டிவிட்டரின் புதிய சி இ ஓ பராக் தான் ஜாக்குக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது