‘கேசரியா’ பாடல் குறித்து பேசியிருக்கும் அலியா பட் இது எனக்கும் முழு குழுவினருக்கும் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு என்று பேசினார்.

  


ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாஸ்திரா என்ற படத்தை தயாரித்துள்ளது. அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்தப்படத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


 


                                 


படத்தில் நாயகன் ரன்பீர் கபூர் சிவனின் அவதாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்படம் இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்தும் வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில் இந்தப்படத்தில் இருந்து நேற்றைய தினம்  “தீத்திரியாய்” என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மதன் கார்கி எழுதியுள்ள இந்தப்படத்தை பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ப்ரீதம் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


 




இந்தப்பாடல் இந்தியில் கேசரியா என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்தப்பாடல் குறித்து நடிகர்கள் ரன்பீர் கபூர், அலியாபட் பேசியிருக்கிறார்கள். அந்தப்பேட்டியில் அலியாபட் கூறும் போது, “என்னைப் பொறுத்தவரை, கேசரியா என்பது ஒருவர் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும்போது அனுபவிக்கும் ஒரு உணர்வு. இது பிரம்மாஸ்திரம் சிவா பாகம் ஒன்றிலிருந்து வெளியாகும் முதல் பார்வை. இது எனக்கும் முழு குழுவினருக்கும் இதயத்திற்கு நெருக்கமான படைப்பாகும். நான் கேட்கும் போதெல்லாம் இந்த பாடல் என்னை ஈர்க்கிறது. இப்பாடல் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன்.” என்று பேசினார்.


 


                                 


                                  


நடிகர் ரன்பீர் கபூர் பேசுகையில், “பாடலின் புத்துணர்ச்சி பார்வையாளர்களிடையே நன்றாக எதிரொலித்தது. எண்ணற்ற இதயங்களைத் தொட்ட ஒரு பாடலை உருவாக்கியதற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று பேசினார்.  


ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்


இவர்கள் ஒரு பக்கம் இவ்வாறு பாடல் குறித்து ஹைப் ஏற்றிக்கொண்டிருக்க, இந்தப்பாடல் லாரீ சூட்டின் பாடலின் காப்பி என்று கூறி நெட்டிசன்கள் பலர் அந்த பாடலையும், கேசரியா பாடலையும் கட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.