Biggboss Tamil Season 5 Episode 23


விஜய் டிவியில் பிக்பாஸ் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. முதல் சீனில், இசைவாணிக்கு நெருப்பு ஆளுமை இருப்பதால், கிச்சன் ஏரியாவுக்கான எல்லா பொறுப்புகளையும் கொடுத்தார். அவர் நினைத்ததைத்தான் இனி அனைவரும் சாப்பிட வேண்டும் என்னும் பவரையும் கொடுத்தார்.


அடுத்தது Name Game. செம்ம இண்ட்ரஸ்டிங்காக நடந்தது இது. ப்ரியங்கா இதில் வென்றார். எல்லோரும் ஜீலியைக் கொஞ்சுங்க என தன்னைத்தானே கொஞ்ச வைத்துக்கொண்டார். அதற்கு பிறகு ஸ்மைலி பால் விளையாட்டு. பிடித்தவர்களுக்கு ஸ்மைலி பாலைப் போட்டு விளையாட வேண்டும். ஐயா யாராவது எனக்கு ஸ்மைலி போல் போடுங்கடா என கெஞ்சிக்கொண்டிருந்தார் ப்ரியங்கா. சிபி உடனே பாலைப் போட்டு விளையாடினார். கடைசியில் ப்ரியங்காவுக்கும், மதுவுக்கும் போட்டுயென வந்து மதுமிதா ஜெயித்தார்.


தலைவர் தகுதியை மாற்றலாம் என சொன்னாலும் கூட, நாணயம் வைத்திருந்தவர்கள் யாரும் அவர்களின் பவரைப் பயன்படுத்தவில்லை. மதுவே தலைவர் என முடிவானது. ராஜு, நிரூப், சிபி எல்லோரும் டிஷ்யூம் டிஷ்யூம் விளையாடியதும் செம்ம ட்ரீட்.