Bigboss Tamil 5 S5 Episode 12

இன்று பிக்பாஸ் சீசன் 5, எபிசோட் 12-இல், யாஷிகாவால் மாடலிங் உலகத்துக்கு அறிமுகமான கதையைச் சொன்ன நிரூப், பெண்களால் எந்த ஆணும் மேல வரக்கூடாதா என்ன என்று ஒரு டயலாக்கால் அப்லாஸை அள்ளினார். அடுத்த வந்த அபினய் தன் மனைவியால் முன்னேறிய கதையைச் சொன்னார். நாடியா சங்கின் கதை குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்களுக்கு ஒரு அலாரம். நாடியா தன் கணவர் சங்குக்கு பெருமையைத் தேடித்தந்தார்.

பாவனிக்கும் ராஜு-ப்ரியங்கா காம்போவுக்கு உரசல் தொடங்குகிறது. அவர் வேலை செய்துகொண்டே இருந்தாலும் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை சொல்லிக்கொண்டே இருக்கிறார். அபினய், எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுக்கொள்வது தேவையில்லை என்கிறார். விஜயதசமியை முன்னிட்டு பிக்பாஸ் உறுப்பினர்கள் நடத்தப்போகும் நாடகம் நாளை எபிசோடில் அரங்கேறும். கூடவே மனஸ்தாப நாடகங்களும்...

இன்றைய ப்ரோமோக்கள் இங்கே..