Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய்யை அடுத்து டிசம்பர் 26-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அக்‌ஷரா, வருண் என இருவரும் டபுள் எலிமினேட் செய்யப்பட்டனர்.


பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 85 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருக்கும் 8 போட்டியாளர்களும் இந்த வாரம் ‘Ticket to Finale’ டாஸ்க்கில் விளையாடி வருகின்றனர். இதில், இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதியில்லாத ஒருவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து நிரூப்பை தேர்வு செய்திருக்கின்றனர். இந்நிலையில், “ஒன்னும் இல்லாத விஷயத்தை பலூன் போல ஊதி பெரிது செய்வது யார்” என பிக் பாஸ் கேட்க,  போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும். இதில், ப்ரியங்கா, ராஜூவின் பெயர்கள் அடிபட, ஒருவரை ஒருவர் முகம் சுளித்து கொள்கின்றனர். 


அடுத்து வெளியான ப்ரொமோவில், ப்ரியங்கா பேசும்போது, பாவனியின் மீது அமீர் அன்பு செலுத்துவதை சுட்டிக்காட்டுகிறார். பாவனியை பயன்படுத்தி அமீர் விளையாடி வருவதாக சொல்லி அவரை “ஒன்னும் இல்லாத விஷயத்தை பலூன் போல ஊதி பெரிது செய்பவர்” என முத்திரை குத்துகிறார். இதை ஏற்று கொள்ளாத அமீர், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டபோது ப்ரியங்காவை குறிபிட்டு பேசுகிறார். இதனால், இந்த டாஸ்க் முடிவதற்குள் ஒரு சின்ன மோதம் இருக்கும் என தெரிகிறது.


மேலும் படிக்க: ‛எனக்கு 3வதும் இல்லை... 4வதும் இல்லை...’ கணவர்கள் எண்ணிக்கை பற்றி மவுனம் கலைத்த அவதாரம் அன்னபூரணி!





ப்ரொமோ:2
























பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 8 போட்டியாளர்கள்: தாமரைச் செல்வி, ப்ரியங்கா, பாவனி, ராஜூ, சிபி, அமீர், சஞ்சீவ், நிரூப்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்