விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ஷோக்கள் அனைத்தும் சீசன்1, சீசன் 2 என எண்ணிக்கையை அடிக்கிக் கொண்டே போகும். அப்படி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ள ஷோ தான் பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பிரபலமான பல போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இப்படி பிக்பாஸ் சீசன் 5 முடிவடைந்தவுடனே பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வருகிறது.


இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சல சலப்புகளுக்குக் காரணமாக தாமரை, ஜூலி, ஸ்னேகன், சுரேஷ் சக்ரவர்த்தி போன்ற பல பலர் பங்கேற்றுள்ளனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நிகழ்ந்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி எப்போது சூடுபிடிக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு தற்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். 


இந்தநிலையில், பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து எல்லை மீறி வருகின்றனர். அந்த வகையில் அனிதா சம்பத் சக போட்டியாளர் நிருப் முன்பு தகாத வார்த்தையை வெளிபடுத்தினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நிருப் அனிதாவிடம் டேபிள் மேல இரண்டு வாட்டர் பாட்டில் இருக்கு. அத எடுத்துட்டு போய் அங்க வை என்று சொல்கிறார். அப்பொழுது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென பேசிய  அனிதா, வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்


இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பெரும்பாலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பெண்களும், இளைஞர்களும் அதிகளவில் பார்த்து வருகின்றனர். மேலும், குழந்தைகளும் இந்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். இப்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவ்வபோது கெட்டவார்த்தைகள் வெளிவருவது அதிர்ச்சியளிக்கிறது. 


இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒரு சிலர் சிகரெட் பிடிப்பது, வனிதா மற்றும் தாமரை ஒருவரை ஒருவர் மரியாதை குறைவாக திட்டிகொண்டது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஓடிடி என்றாலும் பலரும் பார்க்கும் நிகழ்ச்சிக்கு கொஞ்சமாவது கட்டுப்பாடு வேண்டாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண