தமிழில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.



சிவாஜி வசனத்தை பேசி அசத்திய முத்துக்குமரன்:


இந்த 8வது சீசனில் முத்துக்குமரன். விஜே ஆனந்தி, ஜேக்குலின், தீபக், சாச்சனா, சௌந்தர்யா, ரஞ்சித் என பலரும் பங்கேற்றுள்ளனர். விறுவிறுப்பான பல டாஸ்க்குகளுடன் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக முத்துக்குமரன், ஜேக்குலின், அர்னவ் ஆகியோர் மாறியுள்ளனர்.


இவர்களில் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வரும் நபர்களில் ஒருவராக முத்துக்குமரன் மாறியுள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் நேற்று மறைந்த புகழ்பெற்ற நடிகர் சிவாஜி 4 நிமிடங்கள் ஒரே டேக்கில் பேசிய வசனத்தை பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.







குவியும் பாராட்டு:


இந்த வசனமானது சங்கத்தமிழில் எழுதப்பட்ட வசனம் ஆகும். இந்த வசனத்தை முத்துக்குமரன் மூச்சை நிறுத்தாமல் பேச, ஆர்.ஜே.ஆனந்தி அதற்கு தனது முகபாவனையால் நடித்து அசத்தினார். இந்த வசனத்தை முத்துக்குமரன் பேசி முடிக்கவும் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் கைதட்டி பாராட்டினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


முத்துக்குமரன் பேசிய இந்த வசனமானது நடிகர்கள் சிவாஜி. எஸ்.எஸ்.ஆர்., ராஜசுலோச்சனா, பத்மினி நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தில் இடம்பெற்ற வசனம் ஆகும். இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர கருணாநிதி வசனம் எழுதியிருப்பார்.


இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாடக மேடை காட்சி ஒன்றில் சிவாஜி இந்த வசனத்தை பேசியிருப்பார். புகழ்பெற்ற நடிகர் சிவாஜியின் வசன உச்சரிப்புத் திறனுக்கு மிகச்சிறந்த உதாரணங்களில் இந்த வசனமும் ஒன்றாகும். முத்துக்குமரன் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.