Bigg Boss 7 Tamil: பிக்பாஸின் இந்த சீசன் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு வெறுப்பையும் சம்பாதித்து வருகிறது. 


பிக்பாஸ்:


சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனன்யா ராவ், பவா செல்லதுரை, யுகேந்திரன், வினுஷா தேவி, விஜய் வர்மா, அன்ன பாரதி ஆகியோர் வெளியேறினர்.  6 வாரங்கள் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. வார கடைசியில் கமல் முன்பு பெண் போட்டியாளர்கள் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுத்தியதாக கூறி போட்டியாளர் பிரதீப் ஆண்டனி மீது குற்றம் சாட்டினர். 


இதனால் அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற விஷயங்களை தட்டிக் கேட்காமல் பெண்கள் சொன்ன ஒரு காரணத்துக்காகவே இந்த விவகாரம் இந்த அளவுக்கு சென்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இப்படியாகவே, பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு  நாள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.


புள்ளி  கேங்:


குறிப்பாக, புல்லி கேங்காக வலம் வரும் மாயா, ஐஸ்வர்யா, பூர்ணிமா, நிக்ஷன், ஜோவிகா, ரவீணா, மணி போன்றோர் தாங்க முடியாத அட்டாகாசங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் செய்து வருகின்றனர். அனைவரைரும் கேலி, கிண்டல், தகாத வார்த்தைகளை பேசுவது, அதிகாரமாக செயல்படுவது போன்றவைகளை இந்த புல்லி கேங் செய்து வருகிறது. அதிலும், இன்றைய வார கேப்டனாக இருக்கும் மாயா, ஒரு கேப்டனாக நான் இப்படி தான் இருப்பேன், அதிகாரம் பண்ணத்தான் செய்வேன் என்று கூறிக் கொண்டு, ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை ஒரு அடிமை மாதிரி நடத்துவது போல தெரிகிறது. அதிலும் குறிப்பாக விசித்ரா, அர்ச்சானாவிடம் வரம்பு மீறி சண்டையிட்டு வருகிறார்.


வந்த முதல் நாளில் அழுது கொண்டு சோர்வாக இருந்த அர்ச்சனா, நேற்றில் இருந்து ஒத்த ஆளாக அவருக்கு வரும் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். அதுவும், ஒரு மனிதனின் வாழ்க்கையில் விளையாட்டாக சொல்லியது புல்லி கேங்கை மிகவும் கோபப்படுத்தியது. அதனை தொடர்ந்து, கடுப்பான மாயா, சின்ன பிக்பாஸில் இருக்கும் விசித்ரா  மற்றும்  அர்ச்சனாவை வச்சு செய்து வருகிறார்.  மேலும், நான் ஒரு தலைபட்சமாகவே தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.  


தட்டிக் கேட்பாரா கமல்? 


ஒரு கட்டத்தில் அர்ச்சனா, இங்கு இருக்கும் பெண்களாலேயே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வருகிறார். அந்தளவுக்கு மாயாவுடன் சேர்ந்து பூர்ணிமா, ஜோவிகா, ஐஸ்வர்யா அட்டகாசம் செய்து வருகின்றனர்.  இப்படியே இந்த புல்லி கேங் நடந்துக் கொள்வது ரசிகர்களை வெறுக்க வைக்கிறது. புல்லி கேங் செய்யும் அடாவடிகளை வார இறுதியில் கமல் தட்டிக் கேட்க வேண்டும் என்று பலரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், பெண்கள் இப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக புல்லி கேங் இருக்கிறது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த புல்லி கேங்கிற்கு சரியான பாடம் புகட்டுவாரா? இல்ல ஒருதலை பட்சமாக நடந்துக் கொள்வாரா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.