தீபாவளி கொண்டாடத்தை தொடர்ந்து பழைய நிலைக்கு பிக்பாஸ் வீடு சென்றுள்ளது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில், நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த போட்டியை விளையாட மொத்தம் 19 பொம்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொம்மையிலும் ஒவ்வொரு போட்டியாளர்களின் பெயர் எழுதி இருக்கும்.


டால் ஹவுஸ் எனும் இடத்தில் 18 இடங்கள் மட்டுமே இருக்கும். போட்டியாளர்கள், கேம் துவங்கிய உடன், கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொம்மையை எடுத்து அந்த வீட்டிற்குள் வைக்க வேண்டும். வீட்டிற்குள் எந்த பொம்மை இடம் பெறவில்லையோ, அந்த பொம்மையில் இருக்கும் பெயர் கொண்ட நபர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். 


முதல் ப்ரோமோவில், போட்டியில் இருந்து விளக்கப்பட்ட மணிகண்டன் செம டென்ஷனாகி “ அவ்வளோ கண்ணுக்கு தெரிஞ்சும் என் பெயரை எடுக்காம விட்டுடீங்கள. நான் யாருனு நான் காட்டுறேன்” என்று காட்டமாக கூறினார்.






அடுத்து வெளியான ப்ரோவில், முதல் இருந்த பதட்டமான சூழ்நிலை சற்றே குறைந்தது. அதற்கு பின்னர், அந்த போட்டியில் இருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். அதில் “ என்னுடன் நல்லமாதிரியாக பழகினால் எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும். ஆனால் குற்றம் கண்டுபிடித்தால், என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது.. என்ன மாதிரி கெட்டவளும் இந்த உலகத்தில இருக்க முடியாது.” என்று வில்லத்தனமாக பேசினார்.


பிக் பாஸ் போட்டியாளர்கள் : 




போட்டியில் பங்குபெற்ற ஜி.பி முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் இருவர் போக, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகிய 19 நபர்கள் உள்ளனர்.