விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கும் பிக்பாஸ் 5 சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் வாழ்க்கை விபரத்தை கூறும் டாஸ்க் நடந்து வருகிறது. இன்றைய ஒளிரப்பில் அதன் தொடர்ச்சி இடம் பெற உள்ளது. அதற்கான ப்ரமோ சற்று முன் வெளியானது அதில் திருநங்கை நமிதா தனது வாழ்க்கையில் நடந்ததை கதறி கதறி கூறும் காட்சிகள் அதில் இடம் பெற்றன. இதோ அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள அவரது நெகிழ வைக்கும் பேச்சு...




‛‛எங்கம்மா சொல்லி சொல்லி வளர்த்தாங்க என்னிடம்..... வாழ்கையில் மத்திவங்களிடம் குறை இருந்தாலும், அவங்களை ஏற்று வாழனும்னு... ஆனால் அவங்க என்னை ஏத்துக்கல... அடி அடி அடி...னு அடிச்சு எனக்கு உடம்பே மரத்துப் போனது. இந்த சமுதாயத்தில் திருநங்கைகளை பாலியலுக்கும், பிச்சையெடுப்பதற்கும் தான் என பார்க்கிறார்கள். இதுக்கெல்லாம் காரணம் பெத்தவங்க மட்டும் தான். வேறு யாருமே இல்ல...! மாறுங்க மாறுங்கனு... சொல்றாங்க... முதலில் நீங்க மாறுங்க... நாங்கலெல்லாம் எப்பவோ மாறிட்டோம். பெத்தவங்க பொறுப்பில்ல... மத்தவங்க பொறுப்பில்ல... உலகத்துல...’’ என நமீதா மாரிமுத்து கண்ணீர் தழும்ப கதறி அழ.. ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அவருக்கு இணையாக கதறி அழுது அவரை கட்டியணைத்த தேற்றும் ப்ரமோ டச்சிங் ரகமாக இருந்தது. 






நமீதாவின் இந்த கதை விளக்கத்திற்கு பின் அவருக்கு எந்த அளவிற்கு சக போட்டியாளர்கள் மதிப்பெண் வழங்க உள்ளனர். லைக், ஹார்ட், டிஸ் லைக் என மூன்ற விதமான மதிப்பெண் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதில் எந்த மதிப்பெண்ணை வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


மேலும் பல போட்டியாளர்களின் சுய வாழ்க்கை சம்பவங்கள்.. சுவாரஸ்ய நிகழ்வுகளும்...!