‛எனக்கும் ப்ரியங்காவுக்கும் இது தான் பிரச்சனை...’ போட்டு உடைத்த இமான் அண்ணாச்சி!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இமான் அண்ணாச்சி வெளியேறிய நிலையில், அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் தனக்கும் இசைவாணிக்கும் அப்படி என்னதான் பிரச்சினை என்று கூறினார்.

Continues below advertisement

பிக்பாஸ் வீட்டில் இருந்து இமான் அண்ணாச்சி வெளியேறிய நிலையில், அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் தனக்கும் இசைவாணிக்கும் அப்படி என்னதான் பிரச்சினை என்று கூறினார்.

Continues below advertisement

அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இமான் அண்ணாச்சியைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் தனக்கு ஏன் பிரியங்காவைப் பிடிக்காமல் போனது என்றும் இன்னொரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த வீடியோவும் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இமான் அண்ணாச்சி தனது லேட்டஸ்ட் வீடியோ பேட்டியில் "பிக்பாஸ் வீட்டில் யாரையாவது பற்றி யாராவது புறம் பேசும் பழக்கம் இருந்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை. நான் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் முகத்திற்கு நேர் பேசுவேன். அப்படித்தான் பிரியங்கா கத்தும் போதெல்லாம் நான் எனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறேன். பிரியங்கா இங்க வாம்மா, உனக்கு, எனக்கெல்லாம் வெளியே நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். நாம் பேசுவதை வைத்து அவர்கள் நம்மை எடைபோடுவார்கள். எதற்கெடுத்தால் நீ குரலை உயர்த்திப் பேசாதே மா. அது எனக்கு அலர்ஜியாக இருக்கு என்று கூறினேன். அந்தப் பொண்ணு அப்படி சின்ன விஷயத்தையும் ஊதிப் பெரிதாக்கி கத்துவது எனக்குப் பிடிக்கலை. இது தான் பிரியங்காகிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம். பிரியங்காவுக்குப் பிடிக்காத விஷயம், நான் எல்லாத்தையும் முகத்துக்கு நேரவே சொல்வதாக இருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.

இமான் அண்ணாச்சி எக்ஸிட்டால் ஆடிப்போன வீடு!

இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகிவந்த நிலையில் அவர் இல்லாமல் வீடு வெறிச்சோடி இருப்பதாக அவருக்கு எதிராக நாமினேட் செய்தவர்கள் கூட கூறுகின்றனராம். அதுவும் இமான் அண்ணாச்சியை வெளியேற்ற முதல் நாளில் இருந்தே நாமினேட் செய்தவர் பிரியங்கா தான் என்பதை அறிந்து வெளியே வந்ததில் இருந்து அண்ணாச்சியும் ஷாக்கில் தான் இருக்கிறாராம்.

அதேவேளையில் தனக்கு ஏற்கெனவே இருந்த ரசிகர்களின் எண்ணிக்கை பிக்பாஸில் பங்கேற்றதற்குப் பின்னர் பல மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறும் அண்ணாச்சி அதனால் தான் உச்சி குளிர்ந்துபோய் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இசைவாணியிடம் காலை தூக்கிக் காட்டியது ஏன்?

அதேபோல், பிக்பாஸ் வீட்டிற்குள் இசைவாணி, இமான் அண்ணாச்சி மோதல் பெரிய சர்ச்சையானது. இது ஊடகங்களில் பேசுபொருளும் ஆனது. இந்நிலையில் தான் இசைவாணியிடம் தான் அப்படி கடுமையாக நடந்து கொள்ள அவர் மீதான அக்கறையே காரணம் என்று இமான் அண்ணாச்சி கூறியுள்ளார். ஒரு டாஸ்க்கின் நிமித்தமாகவே காலைக் காட்டி வெறுப்பேத்தினேனே தவிர யாரையும் மனம் நோகச் செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லை. இசைவாணி சின்னப்பெண் ஆனால், உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுவார். அதைத்தான் நான் கண்டித்தேன் என்று இமான் அண்ணாச்சி விளக்கம் கூறியுள்ளார்.


பிக் பாஸ் வீடு பிரபலங்களின் அரிதாரத்துக்குப் பின்னால் இருக்கும் முகத்தைத் தோலுரித்துக் காட்டுவதாலேயே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola