Bharathi Kannamma: டாக்டர் பாரதியுடன் வெண்பாவிற்குத் திருமணமா? ட்விஸ்ட் வைத்த வெண்பாவின் அம்மா..!

நடிகை ஃபரினா ஆசாத்,.. இனி ஆரம்பம் தான், இன்னொரு ட்விஸ்ட் இருக்கு. தொடர்ந்து பாருங்கள் என சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

பாரதியுடன் திருமணம் செய்துவைத்துவிடுவாரா? புதிய என்ட்ரி கொடுத்த வெண்பாவின் அம்மா என ரசிர்கள் நினைப்பதற்குள் புதிய டிவிஸ்டாக வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Continues below advertisement

விஜய்டிவியின் சீரியல்கள் என்றாலே விறுவிறுப்பாக இருப்பதோடு அனைத்துத் தரப்பட்ட ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துவைக்கும் திறன் கொண்டிருக்கும். அதில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. கிட்டத்தட்ட சுமார் 1000 எபிசோட்டுகளை நெருங்கினாலும் இன்னும் இழுவையாய் இழுத்து வருகின்றனர். இருந்தப்போதும் பாரதி கண்ணம்மா தொடர்ந்து விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாகவே கதைக்களத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறேன் என்று என்கார்டே போட மாட்டேன் என்கிறார் இச்சீரியலின் இயக்குநர்.

ஆரம்பத்தில் கண்ணம்மாவை மாமியார் வெறுப்பது போன்று ஆரம்பித்த கதைக்களம் தற்போது கணவர் வெறுப்பதாக நகர்ந்துவருகிறது. குழந்தைப்பிறக்கும் தகுதி இல்லாத நிலையைில் எப்படி தனக்கு குழந்தைப்பிறக்க முடியும்? கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தை யார்? என்ற கேள்விகளோடு உள்ளார் பாரதி. இதனைப்பயன்படுத்திக்கொண்ட பாரதியை ஒரு தலையாக காதலிக்கும் வெண்பா பாரதியை தூண்டிவிட்டு விவாகரத்து வரை செல்லவைக்கிறார். ஆனால் நீதிமன்றம் இவர்களை சில மாதங்களுக்கு சேர்ந்து வாழ உத்தரவிடுகிறது.

இது ஒருபுறம் இருக்க கண்ணம்மாவுடன் வளரும் லட்சுமி, தன்னுடைய அப்பா யார் என்பதை அறிந்துக்கொண்ட முயற்சியில், டாக்டர் பாரதி தான் என அறிந்துக்கொள்கிறார். இதனையடுத்து எப்படியாவது அப்பாவையும், அம்மாவையும் சேர்த்து வைக்க வேண்டும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த எபிசோட்டுகளையெல்லாம் பார்த்த போது சீக்கிரம் கதை முடிவுக்கு வரப்போவதாக ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அதற்குள்ளாகவே குறைந்துக் கொண்டே வந்த டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கவும், பரபரப்பையும்  கூட்டவும் ஒரு புது கதாபாரத்திரத்தை களமிறக்கி இருக்கின்றனர். அவர் தான் இதுவரை சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் வலம் வந்த வெண்பாவின் அம்மா. இந்த கதாபாத்திரத்தில் நடிகை ரேகா நடிக்கத்தொடங்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் இவர், எப்படியாவது பாரதியை வெண்பாவிற்கு திருமணம் செய்துக்கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்.

 

ஆனால் பாரதியுடன் பேசுகையில், வெண்பா மட்டும் பாரதியை காதலிப்பதை அறிந்துக்கொள்கிறார். இனி இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறதோ? என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் தான், சமீபத்தில் , ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த வில்லி நடிகை ஃபரினா ஆசாத்,.. இனி ஆரம்பம் தான், இன்னொரு டிவிஸ்ட் இருக்கு. தொடர்ந்து பாருங்கள் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில் தான் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இனி நிச்சயம் நீ எவ்வளவு காத்திருந்தாலும் பாரதி உன்னை திருமணம் செய்துக்கொள்ள மாட்டார் எனவும் நான் சொல்றத கேளு என்கிறார் வெண்பாவின் அம்மா ரேகா.. இதனால் என்ன செய்வது என்று தெரியாத அதிர்ச்சியில் உள்ளார் வெண்பா.. இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola