விஜய் சேனனில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று  பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா தொடர்.


இந்தத் தொடரின்  கதாநாயகன், கதாநாயகி  சந்தேகம் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தன்னுடைய குழந்தைக்கு அப்பா பாரதிதான் என்று சமீபத்தில் கண்ணம்மா அனைவர் முன்னிலையிலும் தெரிவிக்க, அதை மறுத்துவிட்டார் பாரதி.  திடீர்னு கண்ணம்மா தன்னோட பொண்ணு லட்சுமிகிட்ட பாரதிதான் உங்க அப்பா அப்படினு சொல்றா. லட்சுமியும் பாசமா பாரதிகிட்ட ஓடிவரப்ப பாரதி லட்சுமியை தடுத்து, நில்லு. நான் உன் அப்பா இல்லை. இந்த போட்டோவுல இருக்குறாரே அவர்தான் உங்க அப்பானு வருண் போட்டோவை காட்டுறாரு.  


லட்சுமி ரொம்ப அப்பாவியா டாக்டர் அங்கிள்தான் என் அப்பானு ஏன்மா பொய் சொன்னனு? கேட்பாள். வழக்கம்போல கோலிவுட்டின் வெள்ளித்திரை, சின்னத்திரையில் எழுதப்படாத விதியான டுவிஸ்ட்களை எல்லாம் கனவுகளில் நினைத்து பார்ப்பது போல, இத்தனை சம்பவங்களும் கண்ணம்மா நினைத்து பார்ப்பது நினைவுக்கு வந்திருக்கும்.


அப்போது, லட்சுமியின் கேள்விக்கு பதில் சொல்பவராக பாரதி உள்ளே வருகிறார். அவர் லட்சுமியிடம், அவங்க உனக்காக மொத்த வாழ்க்கையையும் தியாகம் பண்ணி இருக்காங்க. நீ பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் உன்னை பார்க்க வராத அப்பாவை பத்தி யார்கிட்டயும் கேட்கவே கூடாது. யார் உன் அப்பா பத்தி கேட்டாலும், எல்லாரிடமும் நீ எங்க அம்மாதான் எனக்கு அப்பா, அம்மா எல்லாமேனு சொல்லனும் லட்சுமியோட மனசை டச் பண்ற மாதிரி சொல்லுவாரு. அப்படியே கண்ணம்மாவோட பாசத்துல உருகுன லட்சுமி, அம்மானு கண்ணம்மாவை கட்டிப்பிடிச்சுக்குவா. அப்புறம் கேக் வெட்டி பர்த்டே செலிபிரஷனும் முடிஞ்சுடும்.



மேலும் தான் வளர்ப்பு குழந்தையாக வளர்த்துவரும் குழந்தை குறித்த உண்மையும் அவருக்கு தெரியாமல் உள்ளது. சதி வேலையில் வெண்பா இவர்களது இந்த பிரிவை வைத்து, பாரதியை அடைய முயற்சிக்கிறார்.  வெண்பவின் சதித்திட்டங்கள் பார்வையாளர்களை மிகவும் பரபரப்புக்கு உள்ளாக்கி வருகிறது. சமீபத்திய எபிசோடில் குழந்தை ஹேமாவிற்கு பிரியாணி தந்து தன்பக்கம் இழுக்க முயல்கிறார் ஹேமா.  இதில் உருவாகும் இருவருக்கும் இடையேயான வாக்குவாதத்தில் வெண்பாவை அறைந்துவிடுகிறார் கண்ணம்மா.  இது நிகழும்போது  பாரதி  அங்கு வருகிறார்.  வெண்பாவை அறைந்ததால் கண்ணம்மாவை கண்டிக்கிறார் பாரதி. ஹேமாவிடம் கண்ணம்மாவிற்கு எந்த உரிமையும் இல்லை என்று கோபமுடன் தெரிவித்துவிட்டு வெண்பாவுடன் அங்கிருந்து சென்று விடுகிறார்.  இதனால் எபிசோடுகள் விறுவிறுப்புடன் இருக்கின்றன.  


கண்ணம்மா மகள்கள் லஷ்மி மற்றும் ஹேமா குறித்த உண்மையை பாரதிக்கு விளங்க வைக்க என்ன செய்யதாலும் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. இதில் வெற்றியடைய என்ன நடவடிக்கைகள் எடுக்க போகிறார்?   ஹேமா தன்னுடைய மகள்கள் என்ற உணமை எப்போது பாரதிக்கு தெரியவரும்? அதை பாரதி எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்? என்பது என பல கேள்விகள்  ரசிகர்களிடம் இருக்கிறது.  பாரதிக்கு உண்மை தெரிய வேண்டும்.  இதையே எத்தனை நாட்களுக்கு கதையை இழுத்தடிப்பது பார்வையாளர்களிடம் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.  ஹேமா தன்னுடைய குழந்தை என்பது பாரதிக்கு தெரிய வேண்டும் என்பது பார்வையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.