பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவால் மீண்டும் பாக்கியா வீட்டுக்கு வரும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.


டார்ச்சர் ராதிகா 


ரேஷன் கார்டு கேட்டு பாக்யா வீட்டுக்கு போன கோபி, ஏய் பாக்யா போய் அதை எடுத்துட்டு வான்னு சொல்ல, உடனே பாக்யா இந்த ஏய், ஓய் எல்லாம் சொல்ல நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி இல்ல புரியுதா. மரியாதை ரொம்ப முக்கியம் என தெரிவிக்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியடைகிறார். ஆனால் ரேஷன் கார்டு எனக்கு கண்டிப்பாக வேணும் என கோபி அடம்பிடிக்க அதெல்லாம் தர முடியாது முடிஞ்சதை பண்ணிக்கோ என  ராமமூர்த்தி தெரிவிக்கிறார். 


இதனால் அங்கிருந்து வெளியே போகும் கோபி ராதிகா என்ன சொல்ல போறாளோ என புலம்பி கொண்டே வீட்டுக்கு சென்று நடந்ததை சொல்கிறார். எதுவுமே உங்களால பண்ண முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்க கோபமெல்லாம் என்கிட்ட மட்டுமே காட்ட தெரியும் என சகட்டுமேனிக்கு ராதிகா பேச, அந்த வீட்டுல இருக்குறவங்க உங்களை வெளியே அனுப்புனாங்களே, உங்களால அந்த ரேஷன் கார்டை வாங்க முடியாதா என கோபியை டார்ச்சர் செய்கிறார். 


இதனால் நொந்துப்போன கோபி நீ ரொம்ப மாறிட்ட என சொல்ல, நீங்களும் தான் என பதிலுக்கு ராதிகா சொல்கிறார். கல்யாணத்துக்கு முன்னாடி அதை பண்றேன், இதை பண்றேன்னு சொல்லிட்டு இப்ப ஒரு ரேஷன் கார்டு கூட வாங்க முடியல என சொல்ல இப்ப என்ன ரேஷன் கார்டு தானே வேணும். இப்பவே போய் வாங்கிட்டு வர்றேன்னு சொல்கிறார். 


கோபியின் பரிதாப நிலைமை


நேராக பாக்யா வீட்டுக்கு செல்லும் கோபி அங்கு கிச்சனில் ரேஷன் கார்டை தேடி இருக்கும் பொருட்களை கலைத்துப் போடுகிறார். இதனால் பாக்யா டென்ஷன் ஆக, வீட்டில் உள்ள மற்றவர்களும் எரிச்சலடைகிறார்கள். ஆனால் நான் ரேஷன் கார்டு இருந்தால் தான் போவேன்னு சொல்ல, செழியன் -ஜெனி பேச்சில் இருந்து கார்டு இருக்கும் இடத்தை கோபி கண்டுபிடிக்கிறார். பின்னர் ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு பேரை தூக்கிட்டு கொடுக்கிறேன் என தெரிவித்து விட்டு ராதிகாவிடம் சென்று கார்டை நீட்டி இப்போ உனக்கு சந்தோஷமா என கோபப்படுகிறார். இந்த முறை கூலாக பேசும் ராதிகா நான் போய் உங்களுக்கு பிளாக் காஃபி எடுத்துட்டு வாரேன்னு சொல்லிவிட்டு செல்கிறார். 


எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி 


வீட்டுக்கு வரும் எழிலிடம் ஈஸ்வரி தயாரிப்பாளர் மகள் வர்ஷினி வந்ததை சொல்கிறார். பேசாமல் அவளை இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரலாம் என சொல்ல எழில் அதிர்ச்சியடைகிறார். இப்ப எதுக்கு கல்யாணத்துக்கு அவசரம் என பாக்யா நிலைமையை சமாளிக்க நான் சும்மாதான் கேட்டேன். செழியன் கல்யாணம் தான் நினைச்சப்படி நடக்கல. ஆனால் எழில் கல்யாணம் நல்லா பெருசா நடக்கணும் என சொல்லிவிட்டு ஈஸ்வரி செல்கிறார். இதனையடுத்து எழில் பாக்யாவிடம் இதற்கு அப்புறம் என்ன பண்றது என பேசுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.