Just In





Meena: மீனா ரூ.300 கோடி சொத்து வாங்கினாரா? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!
மீனா ரூ.300 கோடி சொத்து வாங்கியதாக வெளியாகி வரும் செய்தி குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, கமல் ஹாசன், அஜித், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் கூட மட்டும் இணைந்து நடிக்கவில்லை. எனினும் ஒரு பாடலுக்கு மட்டும் அவருடன் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பார். இந்த நிலையில் தான் அவரது கணவர் இறந்த பிறகு, ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்து வாங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இப்போது சோஷியல் மீடியாவுல மீனா ரூ.300 கோடி சொத்து வாங்கியதாக நியூஸ் பரவி வருகிறது. உண்மையில் அவர் எந்த சொத்தும் வாங்கவில்லை. இது யூடியூப்பில் பரவி வரும் தவறான செய்தி. இதற்கு முன்னதாக மீனா 2ஆவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் தகவல் பரவியது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், உண்மை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ரூ.300 கோடிக்கு சொத்து வாங்கினால் ரூ.150 கோடி வரையில் வரி கட்ட வேண்டும். ஆனால் அவரின் மொத்த சொத்து மதிப்பு கிட்ட தட்ட அவ்வளவு தான் இருக்கும் என கூறியுள்ளார்.
மீனாவின் குடும்பம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், மீனா மட்டுமின்றி மீனாவின் சித்தியும், அவருடைய அம்மாவும் சினிமாவில் நடித்திருக்கிறார்கள். கர்ணன் படத்தில் இருவரும் நடித்துள்ளனர். சினிமா பின்னணியை வைத்து தான் மீனாவும் சினிமாவில் நடிக்க வந்தார். அதுவும் குழந்தை நட்சத்திரம். அவரது முதல் படமே அன்புள்ள ரஜினிகாந்த். ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோயினாக கொடி கட்டி பறந்தார் என்று கூறியுள்ளார்.