நடிகர் சூர்யா கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் வித்தையை சூர்யா கற்றுக்கொண்டது  2001ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தில். அவருக்கு கற்றுக்கொடுத்தது இயக்குநர் பாலா. அதன் பிறகு பாலா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்தில் சூர்யா தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தார்.


இதன் காரணமாக பாலா மீது சூர்யாவுக்கு எப்போதும் தனி பிரியமும், மரியாதையும் எப்போதும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் அவன் இவன் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்தது.




நிலைமை இப்படி இருக்க விக்ரம் மகன் துருவ்வை வைத்து பாலா இயக்கிய வர்மா படம்  பாலாவின் திரை வாழ்க்கையை புரட்டி போட்டது. இதனையடுத்து பலரது விமர்சனங்களுக்கு ஆளான பாலாவின் இயக்கத்தில் படத்தை தயாரிக்க  சூர்யா முன்வந்தார். 


முதலில் தயாரிப்பதாக மட்டும் இருந்த சூர்யா தானே நடிக்கவும் முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தார்.


 






இதனையடுத்து படத்தின் பணிகள் வேகமெடுத்தன. அதன்படி படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. மேலும் இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இதற்கு முன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்பு’ மாநாடு படம் எப்படி இருக்கு..?


20வது ஆண்டை நெருங்கும் சிம்பு: 11 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை ருசித்த சோகம்.. எங்கே சறுக்கினார்?


Shiva Shankar Health: சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு நிதியுதவி - சோனு சூட் உறுதி