Baakiyalakshmi Serial Promo: வசமாக சிக்கிய கோபி.. ராதிகா வீட்டிற்கு பறக்கும் ஆதாரம்.. பரபரக்கும் பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

பாக்கிய லட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Continues below advertisement

விஜய் டிவில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. 

Continues below advertisement

அந்த ப்ரோமோவில், “முன்னாள் காதலி ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்த அவரது மகன் எழில், தனது தாத்தாவிடம் அவர் இப்படி செய்வதால் நமக்கு அவர் தேவையில்லை என்று தோன்றுகிறது. இதைக்கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற எழிலின் தாத்தா, பாக்யாவும் - கோபியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காண்பிக்க செல்கிறார்” 

 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவர் தன் வாழ்கையில் சந்திக்கும், பிரச்னைகளை மையமாக கொண்டு இந்தத்தொடர்  நகர்கிறது. கதையின் மைய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கேரக்டரில் சுசித்ராவும், அவரது கணவர் கோபிநாத் கேரக்டரில் ராஜூவும் நடித்து வருகின்றனர். முன்னாள் காதலி ராதிகாவுடன் சுற்றும் கோபிநாத், அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதனால் தனது மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்ய முயல்கிறார். இதை அறியாத வெகுளி பாக்யா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு குடும்ப நல நீதிமன்றம் வரை சென்றுவிடுகிறார். 

 

சூழ்நிலை இப்படி இருக்க, பகலில் ராதிகா வீட்டில் இருந்த கோபிநாத், இரவில் தன் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில்  இப்போதெல்லாம் ராதிகா வீட்டிலேயே இருந்து விடுகிறார். செழியன் சுயநலவாதி என்பது அப்பட்டமாக தெரிந்தாயிற்று. சூழ்நிலை இப்படி நகர்ந்து கொண்டிருக்க, நடுவில் பாக்யா, எழில், ஜெனி குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola