தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த இளம் இயக்குநர்  அட்லீ. நான்கு படங்கள் இயக்கி நான்கு படங்களிலுமே பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்தவர். ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.


அட்லீ - பிரியாவின் திருமண நாள் :


இயக்குநர் அட்லீ தனது நெருங்கிய தோழி  பிரியாவை 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியா அட்லீ சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அட்லீயின் வெற்றியில் மனைவி பிரியாவின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்று அவரே பல நேர்காணல்களில் கூறியும் இருக்கிறார்.இந்நிலையில் இன்று இயக்குநர் அட்லீ பிரியா தம்பதி தங்களது எட்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.


அட்லீயின் திருமண நாள் வாழ்த்து :


அட்லீ தனது இன்ஸ்டாகிராமில் திருமணநாள் பதிவாக மனைவி பிரியாவுக்கு அழகிய குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.






அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,  "இன்று நமது எட்டாம் ஆண்டு திருமண நாள். இந்த எட்டு வருட பயணம் என்னை ஒரு சிறுவனிலிருந்து ஆணாக மாற்றியுள்ளது.ஒன்றுமே இல்லாமல் நம் வாழ்வை நாம் ஆரம்பித்தோம். இன்று நமக்கு கிடைத்திருக்கும் அனைத்திற்கும் காரணம்… நான் உன்னிடம் இருந்து கற்றுக் கொண்ட பொறுமையும்;நல்ல குணங்களும் தான்! இன்னும் வாழ்வில் நிறைய தூரங்கள் நாம் சென்று வெல்ல வேண்டி இருக்கிறது. எனக்கு ஒரு அழகான தோழியாகவும்,  எல்லாமுமாகவும் இருப்பதற்கு நன்றி!" என்று அழகிய காதல் பதிவை தனது மனைவி பிரியாவிற்கு நடிகர் அட்லீ எழுதி உள்ளார்.


பிரியா அட்லீயின் திருமண நாள் வாழ்த்து :


பதிலுக்கு, பிரியா அட்லீ தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.






அவர் பதிவிட்ட பதிவில்,  "எட்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து பயணிக்க வேண்டி இருக்கிறது. என் அன்பு கணவனுக்கு…இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! என் வாழ்வின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரு நபராக இருப்பதற்கு நன்றி. என் பலமும், பலவீனமும் நீங்கள் தான்.. எனது எல்லாமும் நீங்கள்தான்…என்றென்றும் உங்களை நேசிக்கிறேன்..!" என்று க்யூட்டான திருமண நாள் வாழ்த்தை கணவன் அட்லீக்கு பிரியா தெரிவித்துள்ளார்.