அட்லீ - சல்மான் கான்


ஜவான் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் உடன் அட்லீ கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தப் படத்திற்கு அட்லீ இயக்குநர் சம்பளமாக ரூ.80 கோடி கேட்டதால் இப்படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம் படத்தை கைவிட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.


இதனால் அட்லீ மீண்டும் பாலிவுட் நடிகர் ஒருவரையே தனது நாயகராக தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது .


நடிகர் சல்மான் கானுக்கு அட்லீ கதை சொல்லி அதில் நடிக்க சல்மான் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அட்லீ சல்மான் கான் கூட்டணி தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கமல்ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


அட்லீ






இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் அவருக்கு  கொடுத்த அங்கீகாரம் தான் அடுத்த படத்தில் விஜயை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து விஜயுடன் அடுத்து மூன்று படங்களை இயக்கிய அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கே பாக்ஸ் ஆபிஸில் டஃப் கொடுக்கத் தொடங்கினார். ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலமாக தமிழில் மட்டுமில்லாமல் இந்தி திரையுலகையே மிரள வைத்திருக்கிறார். முன்னதாக ஷாருக் கான் நடித்த பதான் திரைப்படம் 1000 கோடி வசூலித்திருந்த நிலையில் அவரது அடுத்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தான் அட்லீ ஜவான் படத்தை ஒரு மாஸ் ஆக்‌ஷன் படமாக உருவாக்கியிருந்தார். 


தற்போது பாலிவுட்டின் மற்றொரு பெரிய நடிகரான சல்மான் கானுடன் கைகோர்த்திருக்கும் நிலையில் ரசிகர்கள் இன்னொரு மாஸ் ஆக்‌ஷன் படத்திற்காக தயாராகி வருகிறார்கள்.