பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை பெரும் ஹிட்டானது. அதனையடுத்து அவர் சுந்தர். சி இயகக்த்தில் அரண்மனை 3 படத்தில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


இச்சூழலில் ஆர்யா இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். ஆர்யா மற்றும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் ஏற்கனவே டெடி என்ற படம் வெளியானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. 




இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக, வட இந்திய பகுதிகளுக்கு டிசம்பர் மாதம் படக்குழுவினர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆர்யாவுடன் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


 






இந்நிலையில் படத்திற்கு கேப்டன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூறுகையில், “தான் ஏற்கும் பாத்திரங்கள் அனைத்திலும், தன் உயிரைக்கொடுத்து, உழைக்கும் நடிகர் ஆர்யா.


அவர் நடிப்பு திறமை குறித்து ஊரே அறியும். “கேப்டன்” படத்தை பொறுத்தவரை இப்பாத்திரத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்து முழு அர்ப்பணிப்பையும் தந்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். ஆனால் அதனை ஒவ்வொரு படத்திலுமே மாறாமல் செய்து வருகிறார் ஆர்யா. இந்த திரைப்படம் இப்போது இருக்கும் ரசிகர் வட்டத்தை  தாண்டி, பல மொழிகளிலும் ஆர்யாவுக்கு ரசிகர் வட்டத்தை பெருக்கும்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


மேலும் வாசிக்க: Preity Zinta Blessed with Twins: ''ஸ்வீட் எடு.. கொண்டாடு.'' இரட்டைக்குழந்தைக்கு தாயான ப்ரீத்தி ஸிந்தா!