அபர்ணா பாலமுரளி :


சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் அபர்ணா பாலமுரளி. பொம்மி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த  அபர்ணாவின் சினிமா பயணம் மலையாளத்தில்தான் தொடங்கியது. அங்கு அவர்  யாத்ரா துடருன்னு என்னும் படத்தில் அறிமுகமானார்  ஆனாலும் ஃபஹத் பாஷிலுடன் நடித்த மஹேஷிண்டே பிரதிகாரம்தான் அவருக்கு பெரும் பெயர் பெற்றுத் தந்தது. பெற்றோர் சோபா, பாலமுரளி இருவருமே திரைத்துரையில் இசைக்கலைஞர்கள். தந்தை பாலமுரளி அங்கு பிரபல இசையமைப்பாளர். தாய் சோபா வழக்கறிஞர். கூடவே பாடகர். பாரம்பரிய நடனங்களான பரதம், குச்சிப்பிடி, மோகினி ஆட்டத்திலும் தேர்ந்தவர். 







விமர்சனங்களை எதிர்க்கொள்ளும் அபர்ணா :


அபர்ணா மற்ற நடிகைகளை போல ஸீரோ சைஸ்ஸை விரும்பும் பெண்ணல்ல. அவரின் இயல்பான தோற்றம்தான் அவரை அப்படியே ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவும் காரணம் . உடல் எடை குறித்தான விமர்சனங்களை அவ்வபோது அவர் எதிர்கொண்டாலும் அதையெல்லாம் அபர்ணா பொருட்படுத்தவே மாட்டார். இதையும் தாண்டி அபர்ணாவின் வாழ்க்கையில் இன்றளவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.


அதாவது அபர்ணா ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார். அப்போது மேடைக்கு பின்னால் இருக்கு மேக்கப் போடும் அறையில் சாதாரணமாக அமர்ந்திருந்தவரை , அதாவது மேடையில் நடக்கும் பொழுதுதான் நான் அந்த ஆடை குறித்தான கான்சியஸில் இருப்பேன் . மேடைக்கு பின்னால் நாங்கள் ரிலாக்ஸாகத்தான் அமர்ந்திருப்போம் என்கிறார் அபர்ணா. அவர் மேடைக்கு பின்னால் ஓய்வெடுத்த சமயத்தில் யாரோ ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் ஷேர் செய்ய அது வைரலாகிப்போனது. யாரோ செய்த அந்த செயலால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளானதாக தெரிவிக்கும் அபர்ணா  இப்போது ஃபேஷன் ஷோ என்றாலே எனக்கு அந்த பயம் இருக்கிறது. மேடைக்கு பின்னால் என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகைகள் வாழ்க்கை அத்தனை சாதாரணமானது இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றுதானே !