சினிமா விமர்சகர் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடியை தாண்டி வசுல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 


அண்ணாத்த திரைப்படம்  வெளியாகி 21 நாட்கள் ஆன நிலையில், தமிழ்நாடு அளவில் திரைப்படம் முதல் வாரத்தில் 119.53 கோடி வசுல் செய்துள்ள 2 வது வாரத்தில் 22.52 கோடி வசுல் செய்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் 3 வது வாரத்தின் முதல் நாளில் 1.29 கோடியும், 2 வது நாளில் 1.47 கோடியும், மூன்றாவது நாளில் 1.83 கோடியும், 4 ஆம் நாளில் 2.60 கோடியும், 5 மற்றும் 6 ஆம் நாட்களில் 0.46 கோடியும், 0.39 கோடியும், ஆக மொத்தம் 150.09 கோடி வசுல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






உலக அளவில் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட அண்ணாத்த திரைப்படம் முதல் வாரத்தில் 202.47 கோடி வசுல் செய்தது. 2 வது வாரத்தில் 26.32 கோடி வசுல் செய்தது. மூன்றாவது வாரத்தின் முதல் நாளில் 1.56 கோடியும், இராண்டவது நாளில் 1.70 கோடி வசுல் செய்தது. மூன்றாம் நாளில் 2.62 கோடியும், நான்காம் நாளில் 3.54 கோடியும் வசுல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ப்ளிகிஸ் தளத்திலும் வந்திருக்கிறது.


முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவா இயக்கியுள்ள படம் 'அண்ணாத்த'.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. தீபாவளி வெளியீடாக இத்திரைப்படம் திரைக்கு வந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று தான் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் படத்தின் முதல் காட்சி முடிந்ததும் படம் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்பது தெரிந்தது. ஆனாலும் அண்ணாத்த படத்தை பார்க்க மக்கள் திரையரங்களுக்கு வந்த வண்ணமே இருந்தனர். இந்த நிலையில் ரஜினி மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.