பாத்ரூம் க்ளீன் பண்ண சொன்னாரு...ஷிஹான் ஹூசைனி பற்றி பவன் கல்யாண் சொன்ன அதிர்ச்சி தகவல்

மறைந்த கராத்தே ஹுசைனியிடம் ஒரு வருடம் கராத்தே பயிற்சி பெற்ற அனுபவத்தை ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பகிர்ந்துள்ளார்

Continues below advertisement

ஷிஹான் ஹுசைனி

திரைப்படம் மற்றும் கராத்தே பயிற்சிகள் மூலம் பிரபலமான ஹுசைனி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தான் உயிர் வாழ தினசரி 2 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது, நீண்டநாள் உயிர் வாழ முடியாது என அவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து, திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நள்ளிரவு 1.45 மணியளவில் ஹுசைனி (60 வயது) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பத்ரி படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்ததன் மூலம் நடிகரான பிரபலமானார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், ஹுசைனியின் நடிப்பு கவனம் ஈர்த்தது. தனியார் தொலைக்காட்சியிலும் இவரது கராத்தே பயிற்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதேபோல் அதிரடி சமையல் என்கிற பெயரிலும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சினிமாவை தாண்டி வில்வித்தை மற்றும் கராத்தே பயிற்சியாளராகவும் திகழ்ந்தார். நுற்றுக் கணகாணக்கானோருக்கு இது தொடர்பான பயிற்சிகளையும் அளித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாண் ஹூசைனியிடம் ஒரு வருடம் கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது. இறப்பதற்கு முன்பு தனது மாணவர் பவன் கல்யாண் தன்னை வந்து ஒருமுறை பார்க்க வேண்டும் என ஷிஹான் ஹூசைனி கோரிக்கை வைத்திருந்தார். 

ஷிஹான் ஹுசைனி பற்றி பவன் கல்யாண்

" எனக்கு சூப்பர் பவர்ஸ் மேல் நம்பிக்கை இருந்ததால் நான் கராத்தே கற்றுக் கொண்டேன். அப்போதுதான் ஷிஹான் ஹுசைனியை பற்றி தெரிந்துகொண்டேன். தன் மேல் பெட்ரோல் ஊத்திக் கொண்டு அவர் செய்ததை பேப்பரில் படித்தேன். அவரிடம் எப்படி இதை செய்தீர்கள் என கேட்டபோது அதேல்லாம் அப்படிதான் என பதில் சொன்னார். நான் உங்களிடம் கற்றுக் கொள்ளலாமா என்று கேட்டேன். அப்போது எனக்கு என்மேல் நிறைய கோபம் இருந்தது. அதனால் எனக்கு எவ்வளவு வலி கொடுக்க முடியுமோ அவ்வளவு வலி கொடுங்கள் என்று சொன்னேன்.  அந்த கோபத்தை எவ்வளவு முடியுமோ டைவர்ட் செய்ய வேண்டும் என நினைத்தேன். ஷிஹான் என்னை டெஸ்ட் செய்ய நினைத்தார் என்று நினைக்கிறேன். அவர் குருகுலம் மாதிரியான ஒரு முறையை கடைபிடித்தார். நான் அவரிடம் பயிற்சி எடுத்தால் எல்லா இடங்களையும் நான் தான் சுத்தம் செய்ய வேண்டும். பாத்ரூம் கழுவ வேண்டும் , சமையல் செய்ய வேண்டும் என்றார். நான் எல்லாமே செய்கிறேன் என்று சொன்னேன். ஏனால் என்னைப் பொறுத்தவரை கற்றுக் கொடுக்கும் மாஸ்டருக்கு என்னால் செய்ய முடிந்தது அதுதான்" என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்

Continues below advertisement
Sponsored Links by Taboola