அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் மண்டபத்தில் அமுதாவை சிதம்பரம் பார்க்கும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்களின் பேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது. 


முன்னதாக வட்டிக்கு வாங்கிய பணத்தை கட்ட செந்தில், அமுதா, அன்னலட்சுமி ஆகியோர் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே கல்யாண மண்டபத்தில் சமையல் வேலைக்கு வருகின்றனர். அங்கு சிதம்பரம் உட்பட அமுதாவின் குடும்ப உறுப்பினர்களும் வர இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 






பழனி சிதம்பரத்திடம் வாங்க மாமா கீழ தான் சாப்பிடுற இடம் என அழைக்கிறார். நான் எங்கயும் சாப்பிடுறதில்லை என சிதம்பரம் சொல்ல , பழனி இல்ல மாமா நம்ம வீட்டு கல்யாணத்துக்கு பேசிருந்த சமையல்காரர் தான் இங்கேயும் சமையல் பண்றாரு. ஆனால் அன்னைக்கு கடைசி நேரத்துல வரமாட்டேன்னு சொல்லி கழுத்தறுத்துட்டான் என கடுப்பாகிறார்.


ஆனால் சிதம்பரம் மூணு தலைமுறையா நம்ம வீட்டு பங்ஷனுக்கு அவன் தான் பண்ணுவான். அன்னைக்கு ஏன் அவன் அப்படி பண்ணிட்டு போனான்னு தெரியலை.. வாங்க மாமா அவன் இங்க தானே இருக்கான்.. போய் ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துருவோம் என அழைத்து செல்கிறார். அப்போது சாப்பிடும் இடத்தில் நிற்கும்  அங்கு குமரேசன் சாப்பிட சொல்லி சிதம்பரத்தை உட்கார வைக்கிறார். அங்கு  செந்தில் சாப்பாடு பரிமாறுவதை பார்த்து சிதம்பரம் டென்ஷன் ஆகிறார்.


இதனைத் தொடர்ந்து சிதம்பரம் அங்கிருந்து கிளம்ப சமையல்காரர் மோராவது குடிச்சிட்டு போங்க என சொல்ல சிதம்பரம் மோர் குடித்துக் கொண்டிருக்கிறார்.  அப்போது காண்ட்ராக்டர் அமுதாவை இலை எடுக்க சொல்கிறார். எடுத்த இலைகளை குப்பை தொட்டியில் கொட்ட வரும் அமுதாவை அப்படி ஒரு கோணத்தில் பார்த்த சிதம்பரம் அதிர்ச்சி அடைகிறார்.  இதனையடுத்து சிதம்பரம் செந்திலிடம் எப்படி இருந்த என் மகளை இப்படி ஆக்கிட்டியே என கோபத்துடன் அவனை அடித்து அழுதபடி மயங்கி விழும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது.