இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கில் உருவான "புஷ்பா : தி ரைஸ்" திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் முழுமையாக ஈர்த்து சாதனை படைத்தது. 


 



மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா :



அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா : தி ரைஸ் திரைப்படம் உலகளவில் பிரபலமானது. மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் புஸ்பா : தி ரைஸ் திரைப்படம் 'உலகம் முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட்ஸ்' என்ற பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. சிறப்புத் திரையிடலில் அமோக வரவேற்பை பெற்றதன் காரணமாக முதல் பாகமான புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தை டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவில் வெளியிட குழு திட்டமிட்டுள்ளது. 


 






 


ரஷ்யாவில் புஷ்பா : தி ரைஸ் புரொமோஷன் :


அல்லு அர்ஜுன் தற்போது தனது படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதால் அவரது கால்ஷீட்டை பொறுத்து தயாரிப்பாளர்கள் புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தை ரஷ்யாவில் வெளியிடும் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய உள்ளனர். படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக ரஷ்யாவிற்கு செல்ல இருக்கிறது படக்குழு. அவர்களுடன் நடிகர் அல்லு அர்ஜுன் இணைவார் என அறியப்படுகிறது என்கிறது நெருங்கிய சினிமா வட்டாரம்.  


 


நியூயார்க்கில் இந்திய பிரதிநிதியாக அல்லு அர்ஜுன் :


இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக இந்தியாவின் பிரதிநிதியாக அல்லு அர்ஜூன் தனது மனைவி சினேகா ரெட்டியுடன் கலந்துகொண்டார். அதனோடு இந்த ஆண்டு பல விருதுகள் மற்றும் பட்டங்களை வென்றதன் மூலம் புகழின் உச்சியில் இருக்கிறார் அல்லு அர்ஜுன். 


 






 


மேலும் புஷ்பா: தி ரூல் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.