பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரம் நடிகர் அக்ஷய்குமார்.‌ இவரது திரை தோற்றத்திற்கும்,  கதாபாத்திரங்கள் தேர்வு செய்யும் முறைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் நிறைய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுகளையும் கொடுத்துள்ளார். பாலிவுட் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தற்பொழுது ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய்குமார், பூமி பெட்னேகர், சாடியா கதீப், சஹேஜ்மீன் கவுர், தீபிகா கண்ணா மற்றும் ஸ்மிருதி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ரக்‌ஷா பந்தன். அண்ணன் - தங்கை பாசம் குறித்து எமோஷனல் நெகிழ்ச்சி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாகிறது. இதே தேதியில் ஆமிர் கானின் லால் சிங் சத்தா படமும் வெளியாகவுள்ளதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இவர்கள் படத்தால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தை புரொமோட் செய்ய அக்‌ஷய் குமார் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.


மோகன்லாலுடன் நடிக்கத் தயார்!




இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனின் போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அக்ஷய்குமார் பதில் அளித்துள்ளார். அந்த ரசிகர் கேட்கையில், நீங்கள் பல மலையாள படங்களின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ளீர்கள். எப்பொழுது உங்களை மலையாள படங்களில் பார்க்கலாம்? என்று கேட்டுள்ளார்.


அதற்கு பதில் அளித்த அக்ஷய் குமார், தனக்கு  மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கன்னட மற்றும் தமிழ் படங்களில் ஏற்கனவே நடித்துள்ள நிலையில், மலையாள படத்தின் வாய்ப்புக்காகவும் காத்திருப்பதாக கூறுகிறார். மலையாள படங்களில் நடிப்பதில் தனக்கு மிகவும் விருப்பம் என்றும் அதில் என்ன சிக்கல் என்றால், தனக்கு மலையாளம் பேச தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் நான் என்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்ய விரும்புகிறேன்.  எனக்கு வேறு யாரும் குரல் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. நான் மலையாள படம் நடிக்க விருப்பப்படுகிறேன். நான் தமிழில் ரஜினிகாந்த் உடனும், கன்னட படத்திலும் நடித்து விட்டேன். தற்போது மோகன்லாலுடன் மலையாள படத்தில் நடிக்க விரும்பப்படுகிறேன். நான் இயக்குநர் பிரியதர்ஷன் இடம் மோகன்லால் படத்தில் வாய்ப்பு கேட்கப் போகிறேன். அவருக்கு விருப்பம் என்றால் நான் மோகன்லாலுடன் நடிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும், அப்படி ஒன்று நடந்தால் அது தனக்கு மிகவும் பெருமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


சூப்பர் ஸ்டார் வில்லன்:




தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (எந்திரன் 2) 2.0 திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கன்னடத்தில் முன்னணி நடிகர் விஷ்ணுவர்தனுடன் விஷ்ணு விஜயா என்ற ஆக்சன் திரைப்படத்தில் 1993 ஆம் ஆண்டு நடித்துள்ளார் அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது பெரும்பாலும் மக்களுக்கு தெரியாது. தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துவிட்ட நிலையில், தற்போது மலையாள படங்களில் நடிக்க விருப்பம் என்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண