அஜித், விஜய் இணையும் பான் இந்தியா திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கங்கை அமரன் பேசியுள்ளார். 


இது குறித்து கங்கை அமரன் கூறும் போது, “ ரஜினியும் நானும் இப்போது நன்றாக பேசிக்கொள்கிறோம். நான், இளையராஜா, ரஜினி மூன்று பேரும் சேர்ந்தால் கடவுள், தியானம் ஆகியவற்றை பற்றிதான் பேசிக்கொள்வோம். ரஜினி இப்போது நிறைய இடங்களுக்கு மிகச் சாதாரணமாக சென்று வருகிறார். அவர் வித்தியாசமான பிறவி.


என்னை இமயமலைக்கு செல்ல வற்புறுத்தினார். அவருக்கு நல்ல மனசு. அவர் நன்றாக இருக்க வேண்டும். எனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், அஜித் நடிக்கும் பான் இந்தியா படம் குறித்தான பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும்” என்று பேசியிருக்கிறார்.  


நடிகர் விஜய் தற்போது அவரின் 66 ஆவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தின் அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இதற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.   


 






அதே போல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, இவர்கள் இணைந்த வலிமை திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப்படத்தில் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர்.


 






முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில், இராண்டாம் கட்டபடப்பிடிப்பு புனேவில் நடக்க இருக்கிறது. இதனிடையே நடிகர் அஜித், பைக்கில் லண்டனை சுற்றி பயணம் செய்து வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.