அஜித் ரசிகர்களால் ‘ஏகே 61’ என்று அழைக்கப்படும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 


நேர்கொண்ட பார்வை’, `வலிமை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் இணைகின்றனர். `வலிமை’ திரைப்படம் அதன் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் தற்போது இவர்கள் இணைந்திருக்கும் படத்தில் ஒரு பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர். 


 






 ‘ஏகே 61’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்தப்படம் வங்கிக் கொள்ளை அடிப்படையில் உருவாகும் த்ரில்லர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இந்தப்படம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி அவ்வப்போது வைரல் ஆனது.


விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த இந்தப்படப்பிடிப்பிற்கிடையே சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட அஜித், பைக்கில் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவர், 4 தங்கபதக்கங்களையும், 2 வெள்ளிப்பதக்கங்களையும் வென்றார். இந்த நிலையில் ஏகே 61 ஷூட்டிங் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.


அப்டேட் 


அந்த அப்டேட்டின் படி, ஏகே 61 படத்தின் அடுத்தக் கட்டப்பட்ட பிடிப்பு நாளை ஆந்திரபிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படப்பிடிப்பில் அஜித் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இந்தப்படப்பிடிப்பு முடிந்த பிறகு, படக்குழு புனேவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறதாம்.


 இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜான் கொக்கன், வீரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அடுத்தமாதம் படத்தின் டைட்டில், மோஷன்  போஸ்டர், ரிலீஸ் தேதி உள்ளிட்டவை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண