நடிகர் தனுஷ்(Dhanush) மற்றும் ஷ்ருதி ஹாசனை (Shruthi Haasan) வைத்து தனது முதல் படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. பிறகு, வை ராஜா வை படத்தை இயக்கினார். அதுபோக 2017-ல் சினிமா வீரன் எனும் ஆவணப்படத்தையும் இயக்கினார். சில மாதங்களுக்கு முன்பு தனது காதல் கணவர் தனுஷை ஐஸ்வர்யா பிரிந்தார். இந்த பிரிவு குறித்து இருவரும் அவர்களது சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரி தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிகப்படியான வரி செலுத்தியதற்காக வழங்கப்பட்ட தெஸ்பியன் விருதினை ரஜினிகாந்த் சார்பில் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். 






இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth) நேற்று, அவரது ட்விட்டர் பக்கதில் தயாரிப்பாளர் போனி கபூருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை போஸ்ட் செய்திருந்தார். அந்த ட்வீட்டின் கேப்ஷனில் “இந்த மாலைப்பொழுதில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு சிறு வயது நியாபகங்களையும் பப்பி அக்காவைவும் (ஸ்ரீ தேவி) நினைவூட்டுகிறது.” என்று குறிப்பிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல், சுவாரஸ்யமான கதையையும் பகிர்ந்துள்ளதாக தனது ட்வீட்டின் மூலமாக தெரிவித்துள்ளார்.






ரசிகர்கள் பலரும் நடிகர் அஜித் படத்தின் அப்டேட்டை கேட்டு கமெண்ட் செக்‌ஷனை நிரப்பியுள்ளனர். சிலர், நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்க போறீங்களா என்றும், போனி கபூருடன் இணைந்து படம் இயக்க போறீங்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். வலிமை படம் வெளியாகுவதற்குள், போனி கபூரின் (Boney Kapoor)  ட்விட்டரில் வரிசையாக அப்டேட் கேட்டு கலாய்த்து வந்தனர். அது கூட பரவாயில்லை, போனி கபூர் மகள் நடிகை ஜான்வி கபூரின் (Janhvi Kapoor) ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் அப்டேட் கேட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்குநர் ஐஸ்வர்யா, சமீபமாக நடிகர்-இயக்குநர் ராகவ லாரண்ஸை (Raghava Lawrence) சந்தித்தார். இருவரும் எதற்காக சந்தித்தார்கள் என்ற கேள்விக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இருவரும் படம் இயக்குவதை குறித்து பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Also Read : Rajinikanth: ரஜினிகாந்துக்கு பதிலாக விருதுவாங்கிய ஐஷ்வர்யா.. எதற்காக தெரியுமா..? விபரம் உள்ளே..!