“விஜய் முதல்வர் ஆனது நடிகையாக கொஞ்சம் வருத்தம்; மிஸ் பண்றோம்” கடலூருக்கு வருகை தந்த  ‘கட்டா குஸ்தி’ பட ஹீரோயின் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் கட்டா குஸ்தி. விளையாட்டை மையமாக வைத்து குடும்பப் படமாக வந்த இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

 

Continues below advertisement

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு முடிந்து ஜூலை இரண்டாம் தேதி திரைக்கு வந்த கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திரைப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதன்படி, கடலூர் வி ஸ்கொயர் மாலுக்கு வருகை தந்த அவர் ரசிகர்களைப் பார்த்து, ”ஏதோ ஜென்மத்தில் நான் ஏதோ கொடுத்து வைத்திருக்கிறேன்... ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் ஆனது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கருத்துக்கணிப்பில் எட்டு ஒன்பது சீட்டுகள் தான் என கூறிய நிலையில் கூட நான்  மாற்றம் வரவேண்டும், நல்லவர் வரவேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டேன், அவர் முதல்வராக வந்தது மகிழ்ச்சி என்றாலும் ஒரு நடிகையாக வருத்தமாக இருக்கிறது. மிஸ் பண்றோம்” என்று கூறினார்.

மேலும்,  “படத்தில் கூறியிருப்பது போல விளையாட்டு ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலம் நல்லொழுக்கம் கிடைக்கும், சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை கிடைக்கும்” என அறிவுரை வழங்கினார். அடுத்தடுத்து தொடர்ந்து தமிழிலும் படங்களில் நடித்து வருவதாக ஐஸ்வர்ய லட்சுமி தெரிவித்தார்.