நாடெங்கிலும் உள்ள பிரபலங்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் தீபாவளிக் கொண்டாட்டப் புகைப்படங்களைப் பதிவேற்றி வ்ருகின்றனர். அந்த  வகையில் நடிகர் ரஜினிகாந்த் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா தன்னுடைய தீபாவளிக் கொண்டாட்டப் படங்களை பதிவேற்றி உள்ளார்.அது தற்போது வைரலாகி உள்ளது. இன்ஸ்டா புகைப்படங்களில் தன் மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் தந்தை ரஜினி ஆகியோருடன் இருக்கும் படங்களைப் பதிவேற்றி உள்ளார். அதில் நலங்கு வைப்பது, பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட படங்கள் பதியப்பட்டுள்ளன. 






முன்னதாக, நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி தங்களது விவாகரத்து முடிவை தள்ளிவைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மகனின் பள்ளி நிகழ்வு ஒன்றிற்காக இருவரும் இணைந்து இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த போட்டோவின் மூலம் மீண்டும் தனுஷ் ஐஸ்வர்யா இணைந்து விட்டதாக பேசப்பட்டது. இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தனது திருமண வாழ்கையை தொடர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த தகவல்களின் படி, தனுஷ் ஐஸ்வர்யா ஆகிய இரண்டு பேரையும் குடும்பத்தினர், ரஜினி வீட்டில் வைத்து சமரசம் பேசியதாகவும், அவர்களது பேச்சில் உடன்பட்ட தம்பதி முயற்சி செய்வதாக கூறியதாகவும், இதனால் விவாகரத்து முடிவை தற்சமயத்திற்கு இருவரும் நிறுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  ஆனால் அப்படி எதுவுமில்லை என அவரது குடும்ப வட்டாரங்களே தகவல் அளித்தன.


கடிந்து கொண்ட கஸ்தூரி ராஜா தனுஷின் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவரது தந்தை கஸ்தூரி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனுஷ்-ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இது நமக்கு சம்பந்தமில்லாத கேள்வி நீங்க கேட்க கூடாது” என டென்ஷனாக பதிலளித்தார். மேலும், “இதனாலதான் மீடியாவ மீட் பன்றதில்ல..” எனவும் கேள்வி கேட்டவரை கடிந்து கொண்டார்.


இதுகுறித்து ஐஸ்வர்யா தரப்பும் மௌனம் காத்து வருகிறார்கள் என்பதும், அவரது ரசிகர்கள் இருவரும் இணைவார்களா என்கிற பெரிய எதிர்பார்ப்பில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.