பிரமோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25வது படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்குகிறார் . அதர்வா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார் .




 போலீஸ் திரில்லரான இத்திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு சாம் அன்டன்-அதர்வா கூட்டணி நடித்த ‛100’ என்கிற படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அடுத்த படத்திலும் அதே ஜோடி இணைந்துள்ளது. 




படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்ட நிலையில், அதர்வா ஒரே டேக்கில் அந்த காட்சியில் நடித்து முடித்து இயக்குனரின் பாராட்டை பெற்றுள்ளார். 2.50 நிமிடம் வரும் அந்த சண்டை காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என படக்குழு பெரிதும் எதிர்பார்க்கிறது. அது குறித்து இயக்குனர் சாம் அன்டன் சாம் ஆண்டன் கூறுகையில், ‛‛இது எனது நீண்ட நாள், கனவு முயற்சி. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டரும்  பல காலம் முன்பாகவே, இப்படி ஒரு ஆக்சன் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். இப்படத்தில் அந்த கனவு நிறைவேறியுள்ளது. உத்வேகமும் நிறைந்த நடிகர் அதர்வா முரளி போன்ற நாயகன் அமைந்ததால் தான்  இது சாத்தியமானது,’’ என, அதர்வாவை மனதாரபாராட்டியுள்ளார். 


அதே போல, ‛இந்த சண்டை காட்சி, ஆக்ஷன் படங்களில் பெரும் மைல் கல்லாக அமையும் என்றும், நடிகர் அதர்வா  காட்டிய அர்ப்பணிப்பு, அவரது உழைப்பு போற்றப்பட வேண்டியது என, தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பாவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.