கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை திரிஷா. முதல் படத்திலேயே கியூட்டான நடிப்பை வெளிப்படுத்திய திரிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. 90’ஸ் கிட்ஸின் விருப்பமான நடிகைகள் பட்டியலில் நிச்சயம் திரிஷாவிற்கு இடமுண்டு. திரிஷா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம், கன்னடம் போன்ற திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 4 மொழி சினிமாவிலும் முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை திரிஷா சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார். இது தவிர மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ‘ராங்கி’, ’கர்ஜனை’, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.  பொன்னியின் செல்வன் தவிர மற்ற படங்களில் தனக்கான ஷெடியூளை முடித்து கொடுத்துள்ளார் நடிகை திரிஷா. இந்நிலையில் திரிஷா புது படங்கள் எதிலும் கமிட்டாகாமல் இருக்கிறாராம். இதற்கான காரணமாக திருமணத்தை கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆம் திரிஷா தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறாராம்.மாப்பிள்ளை மற்றும் அவரின் திருமண திட்டம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 







கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வரும் திரிஷாவின் ரசிகர்களுக்கு இருக்கும் திரிஷா என்றோ திருமணத்திற்கு தயாராகிவிட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, திருமணம் இடையிலேயே நின்று போனது. அதன் பிறகு தீவிரமாக சினிமாவில் நடித்து வந்தார் திரிஷா. கடந்த ஆண்டு நடிகர் சிம்புவுடன் கிசு கிசுக்கப்பட்டார் திரிஷா. ஆனால் நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் , எங்களுக்கிடையில் காதல் இல்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர் இருதரப்பும். 







மேலும் நேர்காணல் ஒன்றில் பேசிய திரிஷா, “ என்னை முழுமையாக புரிந்துக்கொண்ட நபரைதான் நான் திருமணம் செய்துக்கொள்வேன்,  நிச்சயம் அது ஒரு காதல் திருமணமாகத்தான் இருக்கும். அப்படி ஒருவரை நான் சந்திக்கும் பொழுதுதான் என் திருமணம் நடக்கும் , எனக்கு சிங்கிளாக இருக்க பிடித்திருக்கிறது. நான் எனக்கானவரை சந்திக்கும் வரையில்  வாழ்நாள் முழுக்க சிங்கிளாக இருப்பேன் “என கூறியிருந்தார். இந்நிலையில் திரிஷா தனக்கான நபரை கண்டுபிடித்துவிட்டாரா , அவர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.