இந்திய திரையுலகின் மிகப்பிரபலமான நடிகையாக உலா வருபவர் தமன்னா. 2005-ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான தமன்னா ”கேடி” என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கில் நடித்து முன்னணி நடிகையாக உலா வரும் தமன்னா தற்போது இந்தியிலும் பிசியாக உள்ளார். அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்த ஒரு ரசிகர் தமன்னாவையே கலங்கடிக்க வைத்துள்ளார்.


தமன்னாவின் உருவத்தை பச்சைகுத்திய ரசிகர்


நடிகை தமன்னாவை விமான நிலையம் ஒன்றில் கண்ட அவரது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் தனது கையில் தமன்னாவின் முகத்தை பச்சை குத்தியிருந்ததை தமன்னாவிடம் காட்டினார். அதை பார்த்த தமன்னா அதிர்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றுவிட்டார். பின் அந்த ரசிகரை கட்டி அணைத்து மேலும் அவரிடம் தொடர்ந்து பேசிவிட்டு புறப்பட்டு சென்றார் தமன்னா.


இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமன்னாவின் மனம் கவர்ந்த அந்த ரசிகர் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறார்.






 ஒரு பக்கம் ரசிகர்களால் மெய்மறந்துபோன தமன்னா அதே ரசிகர்களால் கடுப்பாகியும் இருக்கிறார். அது எங்கு தெரியுமா…


 கேரளாவில் தமன்னா:


கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது லூலூ வணிக வளாகம். இந்த வளாகத்தில் புதிய கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் வருகையை அறிந்த ரசிகர்கள் வணிக வளாகத்தில் குவிந்தனர்.


ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. தமன்னா வந்த பிறகு ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். பலரும் அவருடன் செல்ஃபி எடுக்கவும், தமன்னாவை புகைப்படம் எடுக்கவும் முண்டியடித்தனர்.


அத்துமீற முயன்ற ரசிகர்கள்


அப்போது, ரசிகர்களில் சிலர் தமன்னாவிடம் அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தமன்னா கூட்டத்திலே கத்தியுள்ளார். இதையடுத்து, தமன்னாவின் பாதுகாப்பிற்காக வந்த பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தமன்னா தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்ற ரசிகர்களிடம் கோபமாக கத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஒரு முன்னணி நடிகராக இருந்து இத்தனை ஆயிரம் ரசிகர்களை பொது இடத்தில் சந்திக்கும் போது சற்று கதிகலங்கிதான் போகிறார்கள் பிரபலங்கள்.