காதல் கொண்டேன் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதன் பிறகு இவர் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் கூட, இன்றளவும் அனிதாவாகவும் , திவ்யாவாகவும், ஏஞ்சலாகவும் பலரது ஸ்டேட்டஸ்களை நிரப்பிக்கொண்டிருக்கிறார். சோனியா அகர்வால் அதிகமாக செல்வராகவன் படத்தில் நடித்திருந்தார். அவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர் சிறிது காலத்திற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் விவாகரத்தும் செய்துக்கொண்டார் என்பது நாம் அறிந்தது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சோனியா அகர்வால், தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்த காட்சிகளை பகிர்ந்துள்ளார்.






 


அதில் ”காதல் கொண்டேன் திரைப்படத்தில் எனக்கு பிடித்த சீன், கிளைமேக்ஸ் சீன்தான். இரண்டு பக்கமும் ஹீரோக்களை பிடித்துக்கொண்டுருப்பனே. அதை இயக்குநர் சொல்லும் பொழுதே எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ஒரு பெண் இரண்டு ஆண்களை பிடிப்பது சற்று சிரமமாக இருந்தது. அந்த சீனை இன்றைக்கு பார்த்தாலும் ரொம்ப பிடிக்கும். கோவில் படத்துல எல்லா சீன்லையும் பொட்டு வைக்காம இருப்பேன். ஹரி சார் கிருஸ்டியன் பொண்ணு பொட்டு வைக்க வேண்டாம்னு சொல்லிடுவாரு. ஆனால் சிம்புவோட முதல் முறையா கோவிலுக்கு போகும் பொழுது சின்னதா குங்குமம் வச்சுருப்பேன். அதை பைக் கண்ணாடியில பார்க்குற மாதிரி ஒரு சீன் இருக்கும் அது ரொம்ப பிடிக்கும். 7 ஜி படம் முழுக்க எல்லாமே ரொம்ப பிடித்த சீன். அந்த படத்தில் ஒவ்வொரு சீன் பண்ணும் பொழுது எனக்கு பாஸிட்டிவாக இருந்தது. நான் ஷூட்டிங்கில் இருப்பது போலவே உணரவில்லை. அது தினமும் வாழ்ந்த மாதிரிதான். குறிப்பா அந்த படத்துல  கிளைமேக்ஸ் முன்னால  நான் , ரவி இருவரும் நடந்து வருவது போலவும், அவர் என்னை அடிப்பது போலவும் ஒரு காட்சி  இருக்கும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். புதுப்பேட்டை படத்துல நடிக்கும் பொழுது இப்படியான சிறந்த படத்துல நாம நடிக்குறோம்னு தோணல. அந்த படத்துல தனுஷ் உண்மையாகவே  நல்ல உழைப்பை போட்டுருந்தாரு. ஹீரோயின்ஸ்க்கு அந்த படத்துல நிறைய காட்சிகள் இல்லை. இருந்தாலும் நடித்த காட்சிகள் ரொம்ப பிடிக்கும். அந்த படத்துல குளிக்கும் பொழுது தனுஷை மாற்றுவது போல ஒரு காட்சி இருக்கும், அது ரொம்ப பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார் சோனியா அகர்வால்.